கணவன் திட்டியதால் தூக்கில் தொங்கிய மனைவி!

 

கணவன் திட்டியதால் தூக்கில் தொங்கிய மனைவி!

கணவன் திட்டியதால் மனைவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக அந்தப் பெண்ணின் கணவன் கைது செய்யப்பட்டுள்ளார்.

கணவன் திட்டியதால் மனைவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக அந்த பெண்ணின் கணவன் கைது செய்யப்பட்டுள்ளார்.

சென்னை தாம்பரம் அடுத்த புலிகொரடு முத்துமாரியம்மன் கோவில் தெருவைச்  சேர்ந்தவர் சந்தோஷ் குமார். இவர் லாரி ஓட்டுனராக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி செவ்வந்தி. இவர்கள் இருவருக்கும் கடந்த 2013-ம் ஆண்டு திருமணமானது, இருவருக்கும் இரண்டு குழந்தைகள் உள்ளனர். கடந்த ஒரு வருடமாக இருவருக்கும் இடையே குடும்ப தகராறு இருந்து வந்தாக கூறப்படுகிறது. மேலும் நேற்று இரவு வழக்கம் போல் இருவருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில் சந்தோஷ் செவ்வந்தியை கடுமையாக திட்டியுள்ளார். இதனால் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளான செவ்வந்தி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். 

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தாம்பரம் போலிசார் செவ்வந்தியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர், மேலும் இது தொடர்பாக சந்தோஷை காவல் நிலையம் அழைத்து சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். செவ்வந்தியின் மரணத்தில் மர்மம் இருப்பதாக பெண் வீட்டார் தரப்பில் புகார் கொடுத்ததின் அடிப்படையில் தற்கொலைக்கு தூண்டியதாக சந்தோஷ் குமார் கைது செய்யப்பட்டு 306 பிரிவின் கீழ்  வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.