கணவன் கேட்ட ஒரே கேள்வி?: கரண்டியால் அடித்து மண்டையை உடைத்த மனைவி!?

 

கணவன் கேட்ட ஒரே கேள்வி?: கரண்டியால் அடித்து மண்டையை உடைத்த  மனைவி!?

தன்னை அடித்த மனைவி மீது கணவர்  காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

சென்னை : தன்னை அடித்த மனைவி மீது கணவர்  காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

சென்னை அயனாவரம் பகுதியைச் சேர்ந்தவர் கார்த்தி. கொத்தனாராக வேலைபார்த்து வரும் இவருக்கு தனலட்சுமி என்ற மனைவி உள்ளார். தனலட்சுமி தன் சித்தி அபிராமி வைத்துள்ள பழக்கடைக்கு தினமும் செல்வதை வழக்கமாக கொண்டிருந்துள்ளார். இதனால் அவர் வீட்டில் சரியான நேரத்திற்குச் சமைப்பதில்லை என்று கூறப்படுகிறது. இதனால் கணவன் மனைவி இருவருக்குமிடையே அடிக்கடி தகராறு நடந்துள்ளது. 

husband wife

சம்பவத்தன்று தனலட்சுமி சமைக்காததால்  ஆத்திரமடைந்த கார்த்தி  ஏன்  சமைக்கவில்லை? என்று கேட்டுள்ளார் . இதனால் இவருக்குமிடையே தகராறு ஏற்பட  கரண்டியால் கார்த்திக்கின் நெற்றியிலும், இடது கையிலும் மனைவி தனலட்சுமி அடித்துள்ளார். இதில் கார்த்திக்கு காயம் ஏற்பட்டுள்ளது.

pc

இந்நிலையில்  இதுகுறித்து அயனாவரம் காவல் நிலையத்தில் மனைவி தனலட்சுமி மற்றும் அவரது சித்தி அபிராமி மீது கார்த்தி புகார் கொடுத்துள்ளார். அவர் அளித்த புகாரின் அடிப்படையில், இருவர் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.