கணவன் கண்முன்னே மனைவிக்கு பாலியல் வன்கொடுமை: 2 சிறுவர்கள் உள்பட 4 பேர் கைது!

 

கணவன் கண்முன்னே மனைவிக்கு பாலியல் வன்கொடுமை: 2 சிறுவர்கள் உள்பட 4 பேர் கைது!

கணவனை தாக்கிவிட்டு மனைவியைத் தூக்கி சென்று பாலியல் வன்கொடுமை செய்த 2 சிறுவர்கள் உட்பட 4 பேரை போலீசார் கைது செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருவள்ளூர்: கணவனை தாக்கிவிட்டு மனைவியைத் தூக்கி சென்று பாலியல் வன்கொடுமை செய்த 2 சிறுவர்கள் உட்பட 4 பேரை போலீசார் கைது செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அடுத்த பாலகிருஷ்ணாபுரம் பகுதியைச் சேர்ந்தவர் முரளி. அவர் தனது மனைவியோடு கோயிலில் சாமி தரிசனம் செய்து விட்டு, அடர்ந்த காட்டுப்பகுதி வழியாக வந்துள்ளார். கோங்கல் அருகே இரு சக்கர வாகனத்தை வழி மறித்த 4 பேர், முரளியை தாக்கி விட்டு அந்தப் பெண்ணை தூக்கிச் சென்று பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்.

தாக்குதலுக்கு ஆளான முரளி, அருகில் இருந்த கிராம மக்களின் துணையோடு வர 4 பேரும் தப்பி ஓடினர். இது குறித்து கும்மிடிப்பூண்டி சிப்காட் போலீசாருக்கு அளிக்கப்பட்ட தகவலையடுத்து, சம்பவ இடத்திற்குச் சென்று போலீசார் விசாரணையில் ஈடுபட்டனர்.அப்போது, கோங்கல் பகுதியை சேர்ந்த முனியசாமி, மோகன் மற்றும் 18 வயதுக்குக் குறைவான 2 பேர் என 4 பேர் இணைந்து கூட்டு பாலியல் கொடுமை செய்ததாக போலீசார் தெரிவித்தனர். 

பாதிக்கப்பட்ட பெண் அளித்த புகாரின்படி, பாலியல் வன்கொடுமை செய்ததாக 4 பேரையும் கும்மிடிப்பூண்டி சிப்காட் போலீசார் 5 பிரிவுகளின் கீழ் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட முனியசாமி, மோகன் ஆகியோரை பொன்னேரியில் உள்ள நீதிபதி சதீஷ்குமாரின் இல்லத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர். அதே போல, 18 வயதுக்கு குறைவான 2 பேரை திருவள்ளூர் ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, செங்கல்பட்டில் உள்ள சிறுவர் சீர்திருத்தப் பள்ளிக்கு அனுப்பி வைத்தனர்.