‘கணவனை விட்டுவிட்டு வா சேர்ந்து வாழலாம்’ டிக் டோக் தோழியுடன் வீட்டை விட்டு ஓடிய பெண்!

 

‘கணவனை விட்டுவிட்டு வா சேர்ந்து வாழலாம்’  டிக் டோக் தோழியுடன் வீட்டை விட்டு ஓடிய பெண்!

மற்றொரு பெண்ணின் நட்பு கிடைத்துள்ளது. இருவரும் இணைந்து டிக்  டோக்  செய்து  வந்துள்ளனர். 

ஆந்திராவில் கர்னூல் மாவட்டம் ஆதோணி பகுதியைச் சேர்ந்தவர் ரவிக்குமார். இருவருக்கு அர்ச்சனா என்ற மனைவியும் 11 வயது மற்றும் 7 வயதில் இரண்டு மகன்கள் இருக்கின்றனர். டிக் டோக்  மீது மோகம் கொண்டிருந்த அர்ச்சனாவுக்கு தோழி லட்சுமியின் மூலம் பெங்களூரை சேர்ந்த அஞ்சலி என்ற மற்றொரு பெண்ணின் நட்பு கிடைத்துள்ளது. இருவரும் இணைந்து டிக்  டோக்  செய்து  வந்துள்ளனர். 

ttn

இதையடுத்து ஆந்திராவுக்கு வந்த   அஞ்சலி, அர்ச்சனாவின் வீட்டில் ஒரு வாரம் தங்கி இருந்தார். அப்போது இருவரும் நெருக்கமாக இருந்ததோடு எல்லை மீறியுள்ளனர். இதைக்கண்ட அர்ச்சனா குடும்பத்தினர் அஞ்சலியை வீட்டைவிட்டு அனுப்ப சொல்லி தகராறு செய்ய, ஆத்திரமடைந்த அஞ்சலி அர்ச்சனாவை உங்கள் குடும்பத்திலிருந்து பிரித்து காட்டுகிறேன் என்று சபதம் செய்துவிட்டு அங்கிருந்து புறப்பட்டுள்ளார்.

ttn

இந்த விவகாரத்தில் ஏற்பட்ட குழப்பத்தால் அர்ச்சனா  தாய் வீட்டுக்கு சென்றுள்ளார். இதை தொடர்ந்து 4 நாட்களுக்கு முன்பு குழந்தைகளை அழைத்துக் கொண்டு அங்கிருந்தும்  வெளியேறியதாக தெரிகிறது. அர்ச்சனாவை பல இடங்களிலும் தேடியும் கிடைக்காத நிலையில் அவரது குடும்பத்தினர் ஆதோணி காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அர்ச்சனா குடும்பத்தை விட்டுவிட்டு வந்தால் அவருடன் தான் சேர்ந்து வாழத் தயாராக இருப்பதாக அஞ்சலி கூறிவிட்டுச் சென்றதாகவும், அதனால் அவர் அஞ்சலியிடம் சென்றிருக்கலாம் என்றும்  கூறப்படுகிறது.

இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் அர்ச்சனாவையும் அவரது குழந்தைகளையும் தேடி வருகின்றனர்.  இந்த சம்பவம் அப்பகுதி மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.