கணவனை பயமுறுத்த செய்த காரியம்: கடைசியில் வினையாக முடிந்த பரிதாபம்!

 

கணவனை பயமுறுத்த செய்த காரியம்: கடைசியில் வினையாக முடிந்த பரிதாபம்!

கணவரை பயமுறுத்த  தீக்குளிக்க முயன்ற மனைவி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

சென்னை: கணவரை பயமுறுத்த  தீக்குளிக்க முயன்ற மனைவி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

சென்னையை அடுத்த திருமுல்லைவாயல் நாகம்மை நகரைச் சேர்ந்தவர் அனிதா. இவர் மதுரவாயலை சேர்ந்த வினோத்குமார் என்பவரைக் காதலித்து இருவீட்டார் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டார். அனிதா – வினோத் குமார் தம்பதி மதுரவாயலில்  தனிக்குடித்தனத்தில் வசித்து வந்துள்ளனர். 

இந்நிலையில் அனிதாவின் தந்தை கடந்த 5 மாதங்களுக்கு முன்பு இறந்துவிட்டார். இதனால் அனிதா கணவருடன் தாய் வீட்டில் தங்கியுள்ளார். அங்கு வினோத்குமார் அடிக்கடி குடித்து விட்டு வந்து தகராறு செய்ததாகக் கூறப்படுகிறது. 

இந்நிலையில், வழக்கம்போல் குடித்துவிட்டு வந்த கணவரை பயமுறுத்த அனிதா உடலில் எண்ணெய்யை ஊற்றிக்கொண்டு தீக்குளிக்க முயற்சி செய்வது போல அனிதா நடித்துள்ளார்.ஆனால் எதிர்பாராதவிதமாக அனிதா உடலில் தீப்பற்றிக் கொண்டது. இதனால் அதிர்ச்சியடைந்த அவரது குடும்பத்தினர், அவரை உடனடியாக கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அங்கு ஒருவார காலம் சிகிச்சைபெற்று வந்த அனிதா நேற்று உயிரிழந்தார். இதனால் அனிதா குடும்பத்தினர் சோகத்தில் மூழ்கினர். 

 

இதுகுறித்து  திருமுல்லைவாயல் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருவதோடு, திருமணமாகி ஒரு வருடமே ஆவதால் அனிதாவின் மரணம் குறித்து ஆர்டிஓ விசாரணைக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது.