கணவனை கொலை செய்து வீட்டுக்குள்ளே புதைத்த கொடூர மனைவி! மகனும், மகளும் உடைந்தயான கொடூரம்!!

 

கணவனை கொலை செய்து வீட்டுக்குள்ளே புதைத்த கொடூர மனைவி! மகனும், மகளும் உடைந்தயான கொடூரம்!!

விருதுநகர் அருகே காணாமல் போனதாக தேடப்பட்டுவந்த கணவனை மகன் மற்றும் மகளுடன் சேர்ந்து கொலை செய்த மனைவியின் கொடூர செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

சாத்தூர் அருகேயுள்ள ஸ்ரீரங்காபுரத்தை சேர்ந்தவர் 55 வயதான சுப்புராஜ். இவருடைய மனைவி பிச்சையம்மாள், இவர்களுக்கு சுரேஷ் என்ற மகனும், பிரியா என்ற மகளும் உள்ளனர். கடந்த 3 மாதங்களுக்கு முன் சுப்புராஜ் காணாமல்போனதாக கூறி அவரது சகோதரர்களுடன் மனைவியும், மகளும் சேர்ந்து தேடுவது போன்ற நாடகத்தை ஜோடித்துள்ளனர்.  அதுமட்டுமில்லாமல் சுப்புராஜ், வேலைத்தேடி கேரளா போவதாக சொன்னார் என அனைவரையும் குழப்பியுள்ளார் பிச்சையம்மால். வேலைக்காக வெளியூர் சென்ற சுப்புராஜ் தீபாவளிக்கு வீடு திரும்புவார் என்று எதிர்பார்த்து இருந்த நிலையில் தீபாவளிக்கும் அவர் வீடு திரும்பாததால் அவரது சகோதரர்களுக்கு சந்தேகம் வலுத்தது. மேலும் சுப்புராஜின் வீட்டின் அருகே குழி தோண்டி மூடப்பட்டிருந்தது மேலும் சந்தேகத்தை ஏற்படுத்தியது.

Murder

உடனே சாத்தூர் காவல்நிலையத்தில் கடந்த இரு தினங்களுக்கு முன் புகார் அளித்துள்ளனர். காவல் ஆய்வாளர் சுபக்குமார் தலைமையில் நடைபெற்ற விசாரணை நடைபெற்றது. பிச்சையம்மாளிடம் நடத்தப்பட்ட விசாரணையில் அவர் முறையாக பதில் சொல்லாததால் சந்தேகமடைந்த காவல்துறையினர் வீட்டிற்கு வெளியே சந்தேகத்திற்கிடமான இடத்தை தோண்டி பார்த்துள்ளனர். சுமார் 3 அடி ஆழம் தோண்டியபோது அங்கு பாதி எரிந்த நிலையில் எலும்புகள் தென்பட்டுள்ளன. 

Murder

இதனால் தோண்டுவதை நிறுத்திவிட்டு பிச்சையம்மாள் மற்றும் அவரது மகன், மகளிடம் விசாரணையை தீவிரபடுத்தியுள்ளனர். உண்மை தெரிந்துவிட்ட அச்சத்தில் மூன்று பேரும் குற்றத்தை ஒப்புக்கொண்டுள்ளனர். குடித்துவிட்டு வீட்டுக்கு வந்த சுப்புராஜ் தகராறில் ஈடுபட்டதால அவரது தலையில் அடித்து கொலை செய்ததாக பிச்சையம்மாள் வாக்குமூலம் அளித்துள்ளார். அவர் இறந்து போனதாக கருதி, அவரின் உடலை குழுத்தோண்டி புதைத்ததாகவும் ஒப்புக்கொண்டுள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக சுப்புராஜின் மனைவி பிச்சையம்மாள், மகன் சுரேஷ், மகள் பிரியா ஆகிய 3 பேரையும் காவல்துறையினர் கைது செய்தனர்.