‘கணவனுடன் பழகியதால் தனது உயிர்த்தோழியைக் கத்தியால் குத்திய மனைவி’ : சென்னையில் பயங்கரம் !

 

‘கணவனுடன் பழகியதால் தனது உயிர்த்தோழியைக் கத்தியால் குத்திய மனைவி’ : சென்னையில் பயங்கரம் !

பிரியாவுக்கும், முனியம்மா கணவன் கார்த்திக்கும் தொடர்பு ஏற்பட்டுள்ளது. அடிக்கடி முனியம்மாவுக்கு தெரியாமல் இவர்கள் இரண்டு பெரும் வெளியே சென்று வந்ததாகக் கூறப்படுகிறது.

சென்னை கொடுங்கையூர் வேம்புலியம்மன் கோயில் பகுதியைச் சேர்ந்த முனியம்மாவும் நுங்கம்பாக்கம் பகுதியைச் சேர்ந்த பிரியாவும் நெருங்கிய தோழிகள். முன்னியம்மாவை பார்க்க அடிக்கடி பிரியா முனியம்மா வீட்டிற்கு வந்து சென்று கொண்டிருந்துள்ளார்.

ttn

அப்போது பிரியாவுக்கும், முனியம்மா கணவன் கார்த்திக்கும் தொடர்பு ஏற்பட்டுள்ளது. அடிக்கடி முனியம்மாவுக்கு தெரியாமல் இவர்கள் இரண்டு பெரும் வெளியே சென்று வந்ததாகக் கூறப்படுகிறது. இதனை அறிந்த முனியம்மா தன் கணவனுடன் பழக வேண்டாம் என்று பிரியாவை எச்சரித்துள்ளார். ஆனால், பிரியா அதனை கேட்காமல் கார்த்திக்குடன் நெருங்கிப் பழகி வந்துள்ளார்.

bus stop

இந்நிலையில், நேற்று முனியம்மாளும் பிரியாவும் கோயம்பேடு பேருந்து நிலையத்திற்கு வந்துள்ளனர், அங்கு முனியம்மா பிரியாவிடம், நீ என் கணவனுடன் பழகாதே, உன்னால் எங்கள் இருவருக்கும் நிறையச் சண்டை வருகிறது என்று கூறியுள்ளார். முனியம்மா கூறியதைப் பிரியா கேட்காததால் ஆத்திரமடைந்த முனியம்மா, கையில் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து பிரியாவை குத்தியுள்ளார். பிரியா ரத்த வெள்ளத்தில் துடித்துக் கொண்டிருந்துள்ளார். இதனைக் கண்ட காவல்துறையினர் முனியம்மாவை கைது செய்தனர். மேலும், உயிருக்குப் போரடிக் கொண்டிருந்த பிரியாவை சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.