கணவனுக்கு தெரியாமல் மனைவிக்கு குடும்ப கட்டுப்பாடு செய்த மருத்துவர்களால் சர்ச்சை!

 

கணவனுக்கு தெரியாமல் மனைவிக்கு குடும்ப கட்டுப்பாடு செய்த மருத்துவர்களால் சர்ச்சை!

புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்ட தனது மனைவிக்கு தன்னுடைய அனுமதியின்றி மருத்துவர்கள் குடும்பக் கட்டுப்பாடு அறுவை சிகிச்சை செய்து விட்டதாக அவரது கணவர் குற்றம்சாட்டி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்ட தனது மனைவிக்கு தன்னுடைய அனுமதியின்றி மருத்துவர்கள் குடும்பக் கட்டுப்பாடு அறுவை சிகிச்சை செய்து விட்டதாக அவரது கணவர் குற்றம்சாட்டி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

புதுக்கோட்டை நரிமேட்டை சேர்ந்த முருகன் என்பவரது மனைவி கலைச்செல்வி. இவர்களுக்கு ஏற்கனவே இரு குழந்தைகள் உள்ள நிலையில் மூன்றாவது பிரசவத்திற்காக கலைச்செல்வியை முருகன் புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளார். இந்நிலையில் நேற்று இரவு கலைச்செல்விக்கு அறுவை சிகிச்சை மூலம் பெண் குழந்தை பிறந்துள்ளது. அதன்பின் கலைச்செல்வியின் சம்மதத்தோடு மருத்துவர்கள் அவருக்கு குடும்ப கட்டுப்பாடு அறுவை சிகிச்சை செய்ததாக கூறப்படுகிறது. இதனிடையே தனது அனுமதி இல்லாமல் தனது மனைவிக்கு மருத்துவர்கள் குடும்ப கட்டுப்பாடு அறுவை சிகிச்சை செய்து விட்டதாக அவரது கணவர் முருகன் குற்றம் சாட்டியுள்ளார். மேலும் அறுவை சிகிச்சை மேற்கொண்ட மருத்துவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

இச்சம்பவம் குறித்து புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் முதல்வர் மீனாட்சி சுந்தரம் கூறுகையில், நோயாளியின் அனுமதியோடு தான் குடும்ப கட்டுப்பாடு அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளதாகவும் எனினும் அவரது கணவர் முருகன் மருத்துவர்கள் மேல் குற்றம் சாட்டி உள்ளதால் இது குறித்து உரிய விசாரணை மேற்கொண்டு தவறு நடந்திருந்தால் சம்பந்தப்பட்ட மருத்துவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று விளக்கம் அளித்துள்ளார்.