கணவனாக பெருமைப்படுகிறேன்; சிம்புவுக்கு நன்றி: நடிகர் சூர்யா நெகிழ்ச்சி!
ஜோதிகா நடிப்பில் வெளியாகியுள்ள காற்றின் மொழி படத்தையும் படக்குழுவையும் நடிகர் சூர்யா வெகுவாக பாராட்டியுள்ளார்.
சென்னை: ஜோதிகா நடிப்பில் வெளியாகியுள்ள காற்றின் மொழி படத்தையும் படக்குழுவையும் நடிகர் சூர்யா வெகுவாக பாராட்டியுள்ளார்.
நடிகை ஜோதிகா நடித்துள்ள காற்றின் மொழி திரைப்படம் இன்று வெளியாகியுள்ளது. இதனை இயக்குநர் ராதா மோகன் இயக்கியுள்ளார். மொழி திரைப்படத்திற்குப் பிறகு ஜோதிகா – இயக்குநர் ராதாமோகன் கூட்டணி இந்தப் படத்தில் இணைந்துள்ளது. இதில் ஜோதிகாவுடன் இணைந்து, விதார்த், லட்சுமி மஞ்சு, குமரவேல், எம்.எஸ்.பாஸ்கர் உள்ளிட்டோரும் நடித்திருக்கிறார்கள்.
இசையமைப்பாளர் ஏ.ஹெச்.காசிஃப் இசையமைத்திருக்கும் இந்தப் படத்திற்கு, மகேஷ் முத்துசாமி ஒளிப்பதிவு செய்ய, பிரவீன் கே.எல். படத்தொகுப்பாளராகப் பணியாற்றியிருக்கிறார். ஜி.தனஞ்செயனுடன் இணைந்து, கிரியேட்டிவ் எண்டெர்டெயின்மென்ட் நிறுவனம் இதனைத் தயாரித்திருக்கிறது.
I again witnessed Jo’s belief,trust in a project transforming into a memorable film! Thank you #RadhaMohan for making the magic work again with Jo. @Dhananjayan sir thank you for fighting against all odd to get the screens!!. #Respects #Proudhusband #JoCareerBest #kaatrinmozhi pic.twitter.com/QLiaZeKRCC
— Suriya Sivakumar (@Suriya_offl) November 16, 2018
இந்நிலையில் நடிகர் சூர்யா காற்றின் மொழி திரைப்படத்தையும் படக்குழுவினரையும் பாராட்டியுள்ளார். குறிப்பாகக் கதைகளின் மேல் ஜோதிகா வைத்திருக்கும் நம்பிக்கையைப் புகழ்ந்து தள்ளிய சூர்யா, தான் ஒரு பெருமை மிக்க கணவர் எனத் தெரிவித்துள்ளார்.
Thank you #Simbu & @LakshmiManchu for making it even more special and Mylsamy sir I rolled down laughing.. Sure our audience and the raving reviews will give #KaatriMozli it’s deserving success #JoCareerBest pic.twitter.com/LAamSLORZk
— Suriya Sivakumar (@Suriya_offl) November 16, 2018
இப்படத்தில் சிறப்புத் தோற்றத்தில் நடித்த சிம்புவுக்கும், துணை கதாபாத்திரமான லட்சுமி மஞ்சுவுக்கும் சூர்யா தனது நன்றியைத் தெரிவித்துள்ளார்.