கணக்கு ஆசிரியர் உடலுறவு குறித்து பாடம் நடத்துகிறார்! அதிரவைக்கும் மாணவிகளின் புகார்!!

 

கணக்கு ஆசிரியர் உடலுறவு குறித்து பாடம் நடத்துகிறார்! அதிரவைக்கும் மாணவிகளின் புகார்!!

நாமக்கல் மாவட்டத்திலுள்ள ஒரு அரசுப்பள்ளியில் கணக்கு ஆசிரியராக பணியாற்றும் சுரேஷ், மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுப்பதாக புகார் எழுந்துள்ளது. பாதிக்கப்பட்ட மாணவிகள் பள்ளி நிர்வாகத்திடம் பலமுறை புகார் அளித்து இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை எனக் கூறப்படுகிறது.  

நாமக்கல் மாவட்டத்திலுள்ள ஒரு அரசுப்பள்ளியில் கணக்கு ஆசிரியராக பணியாற்றும் சுரேஷ், மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுப்பதாக புகார் எழுந்துள்ளது. பாதிக்கப்பட்ட மாணவிகள் பள்ளி நிர்வாகத்திடம் பலமுறை புகார் அளித்து இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை எனக் கூறப்படுகிறது.  

sexual abuse

இன்று உடன்படிக்கும் மாணவன்களால் மாணவிகளுக்கு ஏற்படும் பாதிப்புகளைவிட பாடம் நடத்தும் ஆசிரியர்களாலேயே சீரழிக்கப்படும் கொடுமை அதிகரித்துவருகிறது. இது போன்ற ஆசிரியர்களால் மாணவிகளை பள்ளிக்கு அனுப்பவே  யோசிக்கின்றனர் பெற்றோர்கள்.

ராசிப்புரம் அருகே உள்ள ஒடுவன்குறிச்சியை சேர்ந்த 37 வயதான சுரேஷ் ராசிப்புரத்திலுள்ள அரசினர் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் 8 ஆம் வகுப்பு படிக்கும் மாணவிகளுக்கு கணக்கு ஆசிரியராக பணியாற்றிவருகிறார். கடந்த 6 மாதங்களாக இவர் மாணவிகளிடம் தகாத முறையில் நடந்துகொள்வதாக அடிக்கடி புகார் எழுந்துள்ளது. இந்நிலையில் கணக்கு ஆசிரியர் வகுப்புக்கு வந்துவிட்டு, கணக்குப்பாடம் நடத்தாமல் அறிவியல் பாடம் எடுப்பதாகவும், உடலுறவு குறித்து அப்பட்டமாக பேசி மாணவியர் அறுவறுப்புப்படும் அளவிற்கு நடந்துகொள்வதாக மாணவிகள் குற்றஞ்சாட்டுகின்றனர்.

sexual abuse

மாணவிகளை தனியாக அழைத்து தொட்டு பேசி, அங்க அடையாளம் குறித்து ஆபாசமாக பேசுவதாக பாதிக்கப்பட்ட மாணவிகள் குற்றஞ்சாட்டுகின்றனர். இந்நிலையில் சுரேஷ் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி, பாதிக்கப்பட்ட மாணவிகளில் 3 பேர், அவர்களது பெற்றோர்களுடன் ராசிப்புரம் டிஎஸ்பி விஜயராகவனிடம் புகார் அளித்துள்ளனர்.