கட்டுப்பாட்டை இழந்த கார் : சாலையோரம் இருந்த பள்ளத்தில் விழுந்து விபத்து..ஒருவர் பலி!

 

கட்டுப்பாட்டை இழந்த கார் : சாலையோரம் இருந்த பள்ளத்தில் விழுந்து விபத்து..ஒருவர் பலி!

பொள்ளாச்சி வழியே தாராபுரம் ரோட்டில் கொடுமுடி  நோக்கி  காரில் சென்று கொண்டிருந்துள்ளார். செல்லும் வழியில் அவரது கார் திடீரென கட்டுப்பாட்டை இழந்துள்ளது.

கேரளா மாநிலம் முவாட்டுபுழா பகுதியைச் சேர்ந்த சுப்பிரமணியம் என்பவர், அவரது மனைவியின் உறவினர் திருமணத்திற்காகத் தமிழகம் வந்துள்ளார். இவர், பொள்ளாச்சி வழியே தாராபுரம் ரோட்டில் கொடுமுடி  நோக்கி  காரில் சென்று கொண்டிருந்துள்ளார். செல்லும் வழியில் அவரது கார் திடீரென கட்டுப்பாட்டை இழந்துள்ளது. கார் வேகமாக ஓடி சுந்தரபுரம் என்னும் பகுதியின் சாலையோரம் இருந்த பள்ளத்தில் விழுந்துள்ளது. அங்குக் கனமழை பெய்து வருவதால் அந்த பள்ளம் முழுவதுமாக மழை நீர் நிரம்பி  இருந்துள்ளது. 

car

பள்ளத்தில் விழுந்த அந்த காரின் முன் பகுதி மழை நீரில் மூழ்கியுள்ளது. இதில், சுப்பிரமணியம் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். இதனைக்கண்ட கிராம மக்கள் காவல்துறையினருக்குத் தகவல் அளித்துள்ளனர். அதன் பின், தகவல் அறிந்து வந்த தீயணைப்புத் துறையினர் காரை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

ttn

பல மணி நேரப் போராட்டத்திற்குப் பிறகு காரை வெளியே எடுத்த தீயணைப்புத் துறையினர், சுப்பிரமணியின் சடலத்தை மீட்டு பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்குப் பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். இது குறித்து, காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.