கட்டுக்குள் அடங்காத கொரோனா : பாதிப்பு எண்ணிக்கை 42 லட்சத்தை தாண்டியது!

 

கட்டுக்குள் அடங்காத கொரோனா : பாதிப்பு எண்ணிக்கை 42 லட்சத்தை தாண்டியது!

 தொற்றிலிருந்து  தப்பிக்க அனைத்து நாடுகளும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுத்து வருகின்றன.  

சீனாவில் கடந்த  ஆண்டு டிசம்பர் மாதம் உருவான  கொரோனா வைரஸ் தற்போது  200ற்கும் மேற்பட்ட  நாடுகளில் பரவி அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. இந்த ஆபத்தான நோய்  தொற்றிலிருந்து  தப்பிக்க அனைத்து நாடுகளும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுத்து வருகின்றன.  

இதனால்  பல்வேறு நாடுகளில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதேபோல் இந்தியாவிலும் கொரோனா தாக்கம் நாளுக்கு நாள் அதிகமாகி கொண்டே வரும் நிலையில் மே 18  ஆம் தேதிக்கு பிறகும்  144 தடை உத்தரவு  நீட்டிக்கப்படும் என  மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

இந்நிலையில், இதுவரை உலகம் முழுவதும் 42 லட்சத்து 33ஆயிரத்து 504பேர்  பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். உலக அளவில் கொரோனா வைரசால்  2 லட்சத்து 89ஆயிரத்து 932பேர் பலியாகி  உள்ளனர் . மேலும் 14லட்சத்து 81ஆயிரத்து 932பேர் குணமாகியுள்ளனர்.