கட்டிலில் இணையும் வைரமுத்து… 40 ஆண்டுகால பாடல் பணியை கொண்டாடும் படக்குழு!

 

கட்டிலில் இணையும் வைரமுத்து… 40 ஆண்டுகால பாடல் பணியை கொண்டாடும் படக்குழு!

லீஃப்ஸ் புரடக்சன்ஸ் தயாரித்துள்ள இப்படத்திற்கு  பாடலாசிரியர் வைரமுத்து பாடல் எழுதுகிறார். ஸ்ரீகாந்த்தேவா இசையமைக்கிறார்.

இயக்குநர் இ.வி.கணேஷ்பாபு இயக்கி  நடிக்கும் திரைப்படம் கட்டில். மேப்பிள் லீப்ஸ் புரொடக்சன்ஸ் தயாரித்திருக்கும்  இந்த படத்தில் சிருஷ்டிடாங்கே கதாநாயகியாக நடிக்கிறார். இதில் மெட்டி ஒலி சாந்தி உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். மேப்பிள் லீஃப்ஸ் புரடக்சன்ஸ் தயாரித்துள்ள இப்படத்திற்கு  பாடலாசிரியர் வைரமுத்து பாடல் எழுதுகிறார். ஸ்ரீகாந்த்தேவா இசையமைக்கிறார்.

 

இந்நிலையில்  வைரமுத்து திரைப்படப்  திரைத்துறைக்கு  வந்து 40 ஆண்டுகளை நிறைவு செய்து 41ஆம் ஆண்டு தொடக்கமாக கட்டில் திரைப்படத்தில் பாடல் எழுதுவதை இப்படக்குழு கொண்டாடிவருகிறது. இதுகுறித்து கட்டில் படக்குழு வெளியிட்டுள்ள அறிக்கையில்,  ‘நமது பாரம்பரியத்தையும் கலாச்சாரத்தையும் உலக அரங்கிற்கு எடுத்துச் செல்லும் விதமாக கட்டில் திரைப்படத்தில் தனித்துவமான மொழி நடையில் பாடல் எழுதுகிறார் வைரமுத்து. 1980 மார்ச் மாதம் 10ஆம் தேதி பாரதிராஜாவின் “நிழல்கள்” படத்தில் இளையராஜாவின் இசையில் “இது ஒரு பொன்மாலை பொழுது” பாடல் மூலம் திரைக்கு வந்த வைரமுத்து, சிறந்த பாடலாசிரியருக்கான தேசிய விருதுகளை 7 முறை பெற்றவர். ஏ.ஆர்.ரஹ்மான் உள்ளிட்ட பல இசையமைப்பாளர்களோடு இணைந்து 7500க்கும் மேற்பட்ட பாடல்களை எழுதியவர்.

yttn

மணிரத்னம்,ஷங்கர் போன்ற முன்னணி இயக்குநர்களோடும், சிவாஜி,ரஜினி,கமல் விஜய்,அஜித் போன்ற முன்னணி நட்சத்திரங்களோடும் தனது பாடல் பங்களிப்பை வழங்கியவர். பத்மஸ்ரீ, பத்மபூசன், சாகித்ய அகாடமி போன்ற பல விருதுகளையும் பெற்றவர். கட்டில் திரைப்பட குழுவின் சார்பாக  வைரமுத்து அவர்களுக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறோம்’ என்று குறிப்பிட்டுள்ளது.