கட்டாயப்படுத்தி ஆபாசமாக படம் எடுத்தனர்! – நிக்கி கல்ராணியின் சகோதரி பகீர் குற்றச்சாட்டு

 

கட்டாயப்படுத்தி ஆபாசமாக படம் எடுத்தனர்! – நிக்கி கல்ராணியின் சகோதரி பகீர் குற்றச்சாட்டு

தன்னை கட்டாயப்படுத்தி ஆபாசமாக நடிக்க வைத்ததாக பிரபல இயக்குநர் மீது சஞ்சனா கல்ராணி குற்றம் சுமத்தியுள்ளார்.

ஹைதராபாத்: தன்னை கட்டாயப்படுத்தி ஆபாசமாக நடிக்க வைத்ததாக பிரபல இயக்குநர் மீது சஞ்சனா கல்ராணி குற்றம் சுமத்தியுள்ளார்.

கன்னடம், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட பல்வேறு மொழி படங்களில் நடித்து வருபவர் சஞ்சனா கல்ராணி. தமிழின் முன்னணி நடிகையாக வலம் வரும் நிக்கி கல்ராணியின் சகோதரியான இவர், 11-ஆம் வகுப்பு படித்துக் கொண்டிருக்கும்போதே நடிக்க வந்துவிட்டார்.

இந்நிலையில், தன் முதல் திரைப்படமான கண்டாஹெண்டதியின் இயக்குநர் ரவி ஸ்ரீவட்சவா, தன்னை கட்டாயப்படுத்தி ஆபாச காட்சிகளில் நடிக்க வைத்ததாக பகிரங்கமாக குற்றம் சுமத்தியுள்ளார்.

இதுகுறித்து சஞ்சனா கல்ராணி கூறுகையில், “கண்டாஹெண்டதி படத்தின் இயக்குநர் ரவி ஸ்ரீவட்சவா, என்னிடம் அப்படத்தின் கதையை கூறிய போது ஆபாச காட்சிகள் அதிகம்m இருந்ததால் நான் மறுத்துவிட்டேன்.

sanjhana galrani

பின்னர், கதையில் மாற்றம் செய்யப்பட்டதால் ஒரே ஒரு முத்தக் காட்சியில் மட்டும் நடிக்க நான் ஒப்புக்கொண்டேன். படப்பிடிப்புக்காக பாங்காக்கிற்கு சென்றபோது என் அம்மாவையும் துணைக்கு அழைத்து வருவேன் என்று நான் கூறியதற்கு அவர்கள் சம்மதித்தார்கள்.

ஆனால், பாங்காக் சென்ற பிறகு என் அம்மாவைப் படப்பிடிப்பு தளத்திற்கு வர அனுமதிக்கவில்லை. அங்கு நிறைய பேர் இருப்பார்கள், அம்மா வர வேண்டாம் என கூறிவிட்டு பல முத்தக் காட்சிகளை படத்தில் சேர்த்தார்கள். 50 முறை முத்தக்காட்சிகளில் நடிக்க வைத்தார்கள். மேலும் என் மார்பு பகுதி, கால்களை ஆபாசமான வகையில் படம் எடுத்தார்கள். கேமராவை அந்த பகுதிகளிலேயே காட்டினார்கள்.

இப்படி எல்லாம் செய்யாதீர்கள் என நான் எதிர்ப்பு தெரிவித்த போது, நாங்கள் சொல்லும்படி எல்லாம் செய்யவில்லை என்றால் உன் கெரியரை நாசமாக்கிவிடுவோம் என இயக்குநர் மிரட்டினார். கனவுகளுடன் வந்த சின்னப் பெண்ணை அவர்கள் தங்கள் இஷ்டத்திற்குப் பயன் படுத்திவிட்டார்கள்” என வருத்தத்துடன் தெரிவித்துள்ளார்.