கட்டபொம்மன் வாரிசுகளால் மணக்கும் பாஸ்வான் பிரியாணி… ‘அறந்தாங்கி ராஜா சேட் !மெஸ்’வேளச்சேரி

 

கட்டபொம்மன் வாரிசுகளால் மணக்கும் பாஸ்வான் பிரியாணி… ‘அறந்தாங்கி ராஜா சேட் !மெஸ்’வேளச்சேரி

செட்டிநாட்டில் சில குடும்பங்களிடையே மட்டும் புழங்கிய இந்த ரகசிய ரெசிப்பியில் தக்காளி, மிளகாய்தூள் கிடையாது.மட்டனை முதலில் நிறையத் தண்ணீர் சேர்த்து வேகவைப்பார்கள்

சென்னை வேளச்சேரி விஜயநகர் பேருந்து நிலையம் எதிரே இருக்கிறது இந்த வித்தியாசமான உணவகம்.இதை நடத்தும் ராஜா சேட்டுக்கு ஒரே லட்சியம்,50 வருசம் முன்பு இருந்த சுவைகளை மீட்டெடுக்க வேண்டும் என்ற முனைப்போடு இந்த உணவகத்தை திறந்திருக்கிறார்.அவரது முயற்சி இங்கு கிடைக்கும் ஒவ்வொரு பண்டத்திலும் தெரிகிறது.உதாரணமாக நம்ம ஊர் குழம்புகளுக்கு முக்கியமானது மல்லி என்பதால் பழைய நாட்டு மல்லியைத் தேடி அலைந்திருக்கிறார்.

mess

கடைசியில் விருதுநகர் மாவட்ட கிராமங்களில் வீரபாண்டிய கட்டப் பொம்மன் வாரிசுகள் இப்போதும் நாட்டு மல்லி சாகுபடி செய்வதை கண்டு பிடித்திருக்கிறார்.இந்த உணவக குழம்புகளின் மணத்துக்கு அந்த மல்லிதான் காரணம் என்கிறார்.அதில் முக்கியமானது பாஸ்வான் பிரியாணி!.

briyani

செட்டிநாட்டில் சில குடும்பங்களிடையே மட்டும் புழங்கிய இந்த ரகசிய ரெசிப்பியில் தக்காளி, மிளகாய்தூள் கிடையாது.மட்டனை முதலில் நிறையத் தண்ணீர் சேர்த்து வேகவைப்பார்கள்.அந்த தண்ணீரில் தான் சீரகசம்பா அரிசியே வேகும்.இந்த பாஸ்வான் பிரியாணி இங்கே செம ஹிட்.விலை 180 ரூபாய் மட்டுமே.அதற்கு வெங்காயப் பச்சடியுடன் ஒரு ஜாம் தொடுகறியாகத் தருகிறார்கள். தக்காளி,நெய்,தேன்,முந்திரி இவற்றுடன் ஒரு மூலிகை சேர்க்கிறார்களாம்,அப்படி ஒரு சுவை அந்த ஜாமுக்கு.

jam

சாப்பாடு 130 ரூபாய்,அதற்குத் தரப்படும் தொடுகறிகளும் கிரேவிகளும் சிறப்பாக இருக்கின்றன.ராஜா சேட் மெஸ்ஸின் சிறப்பே அவர்கள் தரும் கிரேவிகள்தான்.ஒரே ஒரு புரோட்டா வாங்கினால் கூட அதற்கு மூன்று கிரேவிகள் தருகிறார்கள்.

fish

அடுத்தது நெய்மீன் புட்டு போன்ற அதிகம் கேள்விப்படாத ஐட்டங்கள். வஞ்சிரம் மீனை வேகவைத்து தோல் மற்றும் எலும்புகளை நீக்கிவிட்டு எளிய மசாலாக்களுடன் செய்யப்படும் இந்த நெய்மீன் புட்டு குழந்தைகள் இடையே பெரியஹிட்.அடுத்தமுறை அந்தப்பக்கம் போனால் இந்த அனுபவத்தை தவற விட்டு விடாதீர்கள்.