கட்டணம் செலுத்தா விட்டால் மின் இணைப்பு துண்டிக்கப்படாது – மின் பகிர்மான கழகம் அறிவிப்பு

 

கட்டணம் செலுத்தா விட்டால் மின் இணைப்பு துண்டிக்கப்படாது – மின் பகிர்மான கழகம் அறிவிப்பு

மின் கட்டணத்தை சரியான தேதிக்குள் செலுத்தா விட்டால் மின் இணைப்பு துண்டிக்கப்படாது என மின் பகிர்மானக் கழகம் அறிவித்துள்ளது.

சென்னை: மின் கட்டணத்தை சரியான தேதிக்குள் செலுத்தா விட்டால் மின் இணைப்பு துண்டிக்கப்படாது என மின் பகிர்மானக் கழகம் அறிவித்துள்ளது.

கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் நோக்கில் இந்தியா முழுக்க ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் நாடு முழுக்க சாலைகள் வெறிச்சோடி காணப்படுகிறது. மக்கள் தங்கள் வீடுகளுக்குள்ளேயே முடங்கியுள்ளனர். ரெயில், விமான போக்குவரத்துகள் முற்றிலுமாக தடை செய்யப்பட்டுள்ளது. டாஸ்மாக் கடைகளும் நாடு முழுக்க மூடப்பட்டுள்ளது. ஊரடங்கு காரணமாக இம்மாதம் மின்வாரிய ஊழியர்கள் வீடுகளுக்கு சென்று மின் கணக்கு எடுப்பது முடியாத காரியமாக உள்ளது.

ttn

இந்த நிலையில், சரியான தேதிக்குள் மின் கட்டணத்தை செலுத்தாத வீடுகளில் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டதாக சமூக வலைதளங்களில் தகவல் பரவியது. இதற்கு மின் பகிர்மான கழகம் விளக்கம் அளித்துள்ளது. அதன்படி கட்டணத்தை சரியான தேதிக்குள் செலுத்தவில்லையெனில் மின் இணைப்பு துண்டிக்கப்படும் என்பது தவறான தகவல். மார்ச் மாதத்திற்கான மின்கட்டணத்தை ஏப்.15-ஆம் தேதி வரை ஆன்லைன் மூலம் செலுத்தலாம். அப்படியும் மின் கட்டணத்தை செலுத்த முடியவில்லை என்றாலும் மின் இணைப்பு துண்டிக்கப்படாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.