கட்சி நிகழ்ச்சிகளில் பேனர் வைக்க மாட்டோம் ! பிரமாண பத்திரம் தாக்கல் செய்தது அதிமுக !

 

கட்சி நிகழ்ச்சிகளில் பேனர் வைக்க மாட்டோம் ! பிரமாண பத்திரம் தாக்கல் செய்தது அதிமுக !

கட்சி நிகழ்ச்சிகளில் பேனர் வைக்கக் கூடாது என கட்சியினருக்கு அறிவுறுத்தி உள்ளதாக என திமுகவை தொடர்ந்து அதிமுகவும் சென்னை உயர்நீதிமன்றத்தில் பிரமாண பத்திரம் தாக்கல் செய்துள்ளது.

கட்சி நிகழ்ச்சிகளில் பேனர் வைக்கக் கூடாது என கட்சியினருக்கு அறிவுறுத்தி உள்ளதாக என திமுகவை தொடர்ந்து அதிமுகவும் சென்னை உயர்நீதிமன்றத்தில் பிரமாண பத்திரம் தாக்கல் செய்துள்ளது.

 

சென்னை பள்ளிக்கரணையில் சுபஸ்ரீ உயிரிழப்புக்கு காரணமான பேனர் வைத்தது தொடர்பான வழக்கு, சுபஸ்ரீ மரணம் தொடர்பாக சிபிஐ விசாரிக்க உத்தரவிட கோரி தொடர்ந்த வழக்கு இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. சுபஸ்ரீ மரணம் தொடர்பான வழக்கின் விசாரணை அறிக்கையை காவல் துறையினர் தாக்கல் செய்தனர். மேலும் சுபஸ்ரீ மரண வழக்கின் விசாரணை முடிவு இறுதி அறிக்கை விரைவில் தாக்கல் செய்யப்படும் எனவும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. ஏற்கனவே கட்சி நிகழ்ச்சிகளுக்கு பேனர் வைக்க வேண்டாம் என தொண்டர்களுக்கு அறிவுறுத்தி அதற்கான பிரமாண பத்திரம் தாக்கல் செய்திருந்தது. தற்போது அதிமுகவும் பேனர் வைக்க வேண்டாம் என தொண்டர்களுக்கு அறிவுறுத்தி இருப்பதாக பிரமாண பத்திரம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

admk

சீன பிரதமரை வரவேற்று பேனர் வைக்க உயர்நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளதாக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த டிராபிக் ராமசாமிக்கு கண்டனம் தெரிவித்த நீதிபதிகள், பேனர் வைக்க அரசின் விதிகளை பின்பற்ற வேண்டும் என்று தான் உத்தரவு பிறப்பித்ததாக குறிப்பிட்டனர். மேலும் சுபஸ்ரீயின் மரணம் ஈடு செய்ய முடியாத இழப்பு என தெரிவித்த நீதிபதிகள் கூடுதல் இழப்பீடு தொடர்பாக மோட்டார் வாகன தீர்ப்பாயத்தை அணுகலாம் என அறிவுத்தி தமிழக அரசு பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கு விசாரணையை நவம்பர் 22-ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.