கட்சியும் போச்சு… மானமும் போச்சு… வீட்டை விட்டு வெளியேறும் விஜயகாந்த்..!

 

கட்சியும் போச்சு… மானமும் போச்சு… வீட்டை விட்டு வெளியேறும் விஜயகாந்த்..!

மனைவியை நம்பி கட்சியை ஒப்படைத்தால் இப்படி அதளபாதாளத்திற்கு கொண்டு போய் விட்டுவிட்டாரே… தனக்குப்பிறகு இனி கட்சியின் எதிர்காலம் என்னவாகுமோ? என்கிற கலக்கம் அவரை வாட்டி வதைக்கிறது.

மக்களவை தேர்தலுக்கு பிறகு சிகிச்சைக்காக மீண்டும் அமெரிக்கா செல்லவிருந்த விஜயகாந்துக்கு இடையில் சிறு உடல் பிரச்னை காரணமாக இங்கேயே சிகிச்சை எடுத்து வருகிறார். அந்த சிகிச்சை முடிந்தவுடன் அமெரிக்கா சென்று சென்று சிகிச்சை எடுக்க இருக்கிறார். vijayakanth

தேர்தலில் படு தோல்வி அடைந்ததால் மனதளவிலும் சோர்ந்து போய் விட்டார் விஜயகாந்த். இனியும் கட்சியை கரைசேர்க்க முடியுமா? மனைவியை நம்பி கட்சியை ஒப்படைத்தால் இப்படி அதளபாதாளத்திற்கு கொண்டு போய் விட்டுவிட்டாரே… தனக்குப்பிறகு இனி கட்சியின் எதிர்காலம் என்னவாகுமோ? என்கிற கலக்கம் அவரை வாட்டி வதைக்கிறது. கடவுள் பக்தி அதிகம் கொண்ட விஜயகாந்த் தான் குடியிருக்கும் வீட்டை மாற்றிப்பார்த்தால் நன்மை கிடைக்குமா? என்கிற முடிவுக்கு வந்துள்ளாராம்.  premalatha

சினிமாவில் நடித்து, பெரிய நடிகர் ஆனதும் சென்னை, விருகம்பாக்கத்தில் இடம் வாங்கி வீடு கட்டினார் விஜயகாந்த். ஆண்டாள் அழகர் என பெயர் வைக்கப்பட்டுள்ள கண்ணபிரான் தெருவில் தான் இப்போதும் வசித்து வருகிறார் விஜயகாந்த்.  அவரது மச்சான் எல்.கே. சுதீஷ் விஜயகாந்த் வீட்டை விட பெரிய பங்களாவை, சாலிகிராமம் ஏரியாவில் கட்டிப்போட்டு குடியிருந்து வருகிறார்.

vijayakanth

விஜயகாந்த், பூந்தமல்லி அருகில் உள்ள காட்டுபாக்கம் ஏரியாவிலும் இடம் வாங்கி, பெரிய பங்களா கட்டி இருக்கிறார். அரசியல் தொடர் தோல்விக்கும், தன் உடல்நிலை பாதிப்புக்கும், இப்ப இருக்கிற வீட்டை மாற்றினால் ஏதாவது பலன் கிடைக்கும் என முடிவு செய்திருக்கிறார். உள்ளாட்சி தேர்தலுக்கு முன்பே புது வீட்டில் குடியேறி பழைய பன்னீர்செல்வமாகி மீண்டும் கட்சியை பழைய ஃபார்முக்கு கொண்டு வரும் எண்ணத்தில் இருக்கிறது அவரது குடும்பம்.