கட்சியில் இருக்கிறதே 5 பேர்தானா ஐயா? – ராமதாசை பங்கம் செய்யும் தி.மு.க எம்.பி

 

கட்சியில் இருக்கிறதே 5 பேர்தானா ஐயா? – ராமதாசை பங்கம் செய்யும் தி.மு.க எம்.பி

பா.ம.க நிறுவனர் டாக்டர் ராமதாஸ் திரௌபதி படத்தை சில தினங்களுக்கு முன்பு பார்த்தார். பிறகு என்ன நினைத்தாரோ மீண்டும் ஒரு முறை பார்க்க சத்யம் திரையரங்கம் வந்தார்.

பா.ம.க நிறுவனர் ராமதாஸ் இரண்டாவது முறையாக திரௌபதி படத்தைப் பார்த்து தொடர்பாக ட்வீட் வெளியிட்டதை வைத்து தி.மு.க எம்.பி செந்தில் குமார் நக்கல் பதிவை வெளியிட்டுள்ளார்.

dr.ramadoss

பா.ம.க நிறுவனர் டாக்டர் ராமதாஸ் திரௌபதி படத்தை சில தினங்களுக்கு முன்பு பார்த்தார். பிறகு என்ன நினைத்தாரோ மீண்டும் ஒரு முறை பார்க்க சத்யம் திரையரங்கம் வந்தார்.பின்னர் இது பற்றி தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில், “பெண்ணுரிமை பேசும் திரௌபதி திரைப்படத்தை இரண்டாவது முறையாக நேற்று மாலை சென்னை சத்யம் திரையரங்கில் பா.ம.க. நிர்வாகிகள் இசக்கி படையாட்சி, செல்வகுமார், வண்ணை இராதாகிருஷ்ணன், எனது பெயரன் முகுந்தன் மற்றும் பாட்டாளி மக்கள் கட்சியினருடன் பார்த்தேன்” என்று குறிப்பிட்டிருந்தார்.
இதற்கு தருமபுரி நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் செந்தில் குமார் பதில் அளித்திருந்தார். அதில், “ஐயா. முதல் காட்சி 23 பேர், இரண்டாவது காட்சி 4 பேர் உடன், மூன்றாவது காட்சி நீங்கள் மட்டுமா ஐயா?

 

நிர்வாகிகள், கட்சியினருடன் பார்த்தேன் என்று பதிவிட்டுள்ளீர்கள். நம்ம கட்சியில் 5-10 பேர்தான் உள்ளார்களா? எல்லாம் நம்பிக்கை இழந்து போய்விட்டார்களா? இல்ல இன்னமும் பூத்ல இருக்காங்களா?” என்று நக்கலாக கூறியுள்ளார்.
கடந்த நாடாளுமன்றத் தேர்தலின் போது நம்முடைய ஆட்கள் எல்லாம் பூத் உள்ளே இருப்பார்கள் என்று அன்புமணி ராமதாஸ் பேசியிருந்தார். கள்ள ஓட்டு போடும் வகையில், எதிர்க்கட்சிகளை மிரட்டும் வகையில் அவரது பேச்சு அமைந்திருந்தது.அதை சுட்டிக்காட்டி தற்போது தி.மு.க எம்.பி டாக்டர் செந்தில்குமார் பதிவிட்டுள்ளதை தி.மு.க-வினர் ரீட்வீட் செய்து வருகின்றனர்.