கடைசி நேரத்தில் திருமணத்தை நிறுத்திய மணப்பெண்: சாமி ஆடி பரபரப்பை கிளப்பிய சம்பவம்!

 

கடைசி நேரத்தில் திருமணத்தை நிறுத்திய மணப்பெண்: சாமி ஆடி பரபரப்பை கிளப்பிய சம்பவம்!

தாலி கட்டும் நேரத்தில் மணப்பெண் மறுத்ததால், திருமணம் நின்ற சம்பவம் குடும்பத்தினர் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சங்கரன்கோவில்: தாலி கட்டும் நேரத்தில் மணப்பெண் மறுத்ததால், திருமணம் நின்ற சம்பவம் குடும்பத்தினர் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருநெல்வேலி மாவட்டம் சங்கரன்கோவில் சங்கர நாராயணசாமி கோயிலில் நேற்று முகூர்த்தம் நாள் என்பதால் திருமணம் செய்வதற்காக 21 பேர் பதிவு செய்திருந்தனர். அதில் உடப்பன் குளத்தை சேர்ந்த மணமகன் காளீஸ்வரன், தேனி மாவட்டம் சின்ன கூலாம்பட்டியை சேர்ந்த மணமகள் பாண்டியம்மாள் ஆகியோர் திருமணத்துக்காக வந்திருந்தனர். அவர்களுடன் இருவீட்டாரைச் சேர்ந்த உறவினர்களும் திருமணத்திற்காக வந்திருந்தனர். 

marriage

இந்நிலையில் மணப்பெண் பாண்டியம்மாள் எதிர்பாராதவிதமாகச் சுவாமி சன்னதி முன்பு சாமி ஆடுவது போன்று  கீழே விழுந்தார். இதையடுத்து திருமணம் செய்ய விருப்பமில்லை. தாம் திருமணம் செய்து கொள்ளப் போவதில்லை என்று கூறினார். இதனால்  இருவீட்டாரும் அதிர்ச்சியடைந்தனர்.  இதை தொடர்ந்து மணமகளிடம் பலமுறை பேச்சுவார்த்தை நடத்தியும் அவர் திருமணம் செய்ய சம்மதிக்கவில்லை. இதனால் அங்கு  பரபரப்புஏற்பட்டது. இதையடுத்து திருமணம் நின்று போய்விட்டதால், இருவீட்டாரும் சோகத்துடன் திரும்பி சென்றனர்.