கடைசியில் தோனிக்கான மாற்று வீரரை இந்தியா கண்டுபிடித்து விட்டது – ஷோயப் அக்தர் பேட்டி

 

கடைசியில் தோனிக்கான மாற்று வீரரை இந்தியா கண்டுபிடித்து விட்டது – ஷோயப் அக்தர் பேட்டி

இந்திய கிரிக்கெட் அணியில் தோனிக்கான மாற்று வீரர் கிடைத்து விட்டதாக முன்னாள் பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் ஷோயப் அக்தர் தெரிவித்துள்ளார்.

இஸ்லாமாபாத்: இந்திய கிரிக்கெட் அணியில் தோனிக்கான மாற்று வீரர் கிடைத்து விட்டதாக முன்னாள் பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் ஷோயப் அக்தர் தெரிவித்துள்ளார்.

இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலிய தொடரை முடித்த கையோடு நியூசிலாந்து தொடருக்கு கிளம்பி விட்டது. ஆஸி.,க்கு எதிரான வெற்றி வீரர்களை உத்வேகப்படுதி உள்ளது. நியூசிலாந்துக்கு எதிரான டி20 அணியிலும் தோனிக்கு இடம் கிடைக்கவில்லை என்பதில் அவரது ரசிகர்கள் சோகத்தில் உள்ளனர். இந்நிலையில், இந்திய கிரிக்கெட் அணியில் தோனிக்கான மாற்று வீரர் கிடைத்து விட்டதாக முன்னாள் பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் ஷோயப் அக்தர் தெரிவித்துள்ளார். மனீஷ் பாண்டேவை தான் அக்தர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

ttn

இது தொடர்பாக ஒரு யூடியூப் சேனலுக்கு அவர் பேசுகையில், “ஒருவழியாக தோனிக்கான மாற்று வீரரை இந்தியா கண்டுபிடித்து விட்டது. மனீஷ் பாண்டே தோனிக்கு நல்ல மாற்று வீரராக திகழ்வார். ஸ்ரேயாஸ் ஐயர் கூட முழுமையான வீரராக தெரிகிறார். இவர்களது பங்களிப்பு இந்திய அணியின் பேட்டிங் வரிசைக்கு கூடுதல் பலத்தை கொடுக்கும்” என்றார்.