கடைக்கு சென்ற பெண் ஈவ் டீசிங்- ரோட்டோர ரோமியோக்கள் கைது …

 

கடைக்கு சென்ற பெண் ஈவ் டீசிங்- ரோட்டோர ரோமியோக்கள் கைது …

சபர்மதி பகுதியில் 20 வயது பெண்ணொருவர் தனது மூன்று சகோதரர்கள் மற்றும் குடும்பத்தினரோடு வசிக்கிறார். வியாழக்கிழமை மாலையில் அவர் மருந்து வாங்க கடைக்கு சென்றார் .அப்போது கடை வீதியில் லாலன், தஷ்ரத், மனோஜ், கலு மற்றும் டினியோ என்ற வாலிபர்கள் நின்று கொண்டு அவரை பார்த்து சைகை செய்தனர் .

அகமதாபாத் நகரின் சபர்மதி பகுதியில் வியாழக்கிழமை மாலை 20 வயதான பெண் ஐந்து வாலிபர்களால் பாலியல் துஷபிரயோகம் செய்யப்பட்டு நடுரோட்டில் இழுத்துச்செல்லப்பட்டார் 
சபர்மதி பகுதியில் 20 வயது பெண்ணொருவர் தனது மூன்று சகோதரர்கள் மற்றும் குடும்பத்தினரோடு வசிக்கிறார். வியாழக்கிழமை மாலையில் அவர் மருந்து வாங்க கடைக்கு சென்றார். அப்போது கடை வீதியில் லாலன், தஷ்ரத், மனோஜ், கலு மற்றும் டினியோ என்ற வாலிபர்கள் நின்று கொண்டு அவரை பார்த்து சைகை செய்தனர். அதனால் அவர் அவர்களை திட்டியுள்ளார் .அதனால் அந்த வாலிபர்கள் அந்த பெண்ணை பாலியல் துஷ்பிரயோகம் செய்து நடுரோட்டிலேயே இழுத்து சென்றனர். அதை தட்டிக்கேட்க வந்த அவரின் இரண்டு சகோதரர்களை தாக்கியுள்ளார் .போலீசார் இந்த சம்பவம் பற்றி கேள்விப்பட்டு வருவதர்குள் அவர்கள் ஓடிவிட்டனர், பிறகு வழக்கு பதிவு செய்து அவர்களை தேடி வருகின்றனர் .