“கடுப்பேத்திய மனைவி மீது கத்தியை ஏத்திய கணவன்”-டிக்டாக் விடியோவால் அந்த வினை 

 

“கடுப்பேத்திய மனைவி மீது கத்தியை ஏத்திய கணவன்”-டிக்டாக் விடியோவால் அந்த வினை 

மைசூருவில் பெரியபட்னாவில் வியாழக்கிழமை கணவனை டிக்டாக் வீடியோமூலம் கடுப்பேத்தியதற்காக தனது பிரிந்த மனைவியை அவர் கத்தியால் குத்தினார். அந்தப் பெண் இப்போது ஆபத்தான நிலையில் கிருஷ்ணராஜேந்திர மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். . மனைவி  சவிதாவை தாக்கியதற்காக அவரின் கணவர் சீனிவாசா கைது செய்யப்பட்டுள்ளார்

மைசூருவில் பெரியபட்னாவில் வியாழக்கிழமை கணவனை டிக்டாக் வீடியோமூலம் கடுப்பேத்தியதற்காக தனது பிரிந்த மனைவியை அவர் கத்தியால் குத்தினார். அந்தப் பெண் இப்போது ஆபத்தான நிலையில் கிருஷ்ணராஜேந்திர மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். . மனைவி  சவிதாவை தாக்கியதற்காக அவரின் கணவர் சீனிவாசா கைது செய்யப்பட்டுள்ளார்
.
சீனிவாசாவும் சவிதாவும் பத்தாண்டுகளுக்கு  முன்பு திருமணம் செய்து கொண்டனர், தம்பதியருக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். நான்கு ஆண்டுகளுக்கு முன்பு, அவர் தனது கணவரிடமிருந்து பிரிந்து, மைசூருவில் தனியாக வசிக்கிறார். ஆனால்  குழந்தைகள் தங்கள் தந்தையுடன் பெரியபட்னாவில் வசிக்கிறார்கள் . 
அவரின் மனைவி சவிதா  கணவனை கடுப்பேத்த  மோசமான வேலையை செய்தார், 
சீனிவாசாவின் கூற்றுப்படி, மனைவி சவிதா ஒரு நபருடன் போஸ் கொடுத்து, டான்ஸ் ஆடி அந்த விடியோவை கணவனுக்கு அனுப்பினார் . இதனால் கோபமான கணவன்,தன் மனைவியை  பெரியபட்னாவில் உள்ள ஒரு விழா மண்டபத்தில் நடந்த  அவர்களின் மகனின் பிறந்தநாளுக்கு அவளை அழைத்தார். 
அவர் அங்கு  வந்தவுடன், சீனிவாசா ஒரு கத்தியை வெளியே எடுத்து, ஸவிதாவை  மூன்று முறை குத்தினார். அதனால் சவிதாவின் வயிற்றிலும், முதுகிலும் காயம் ஏற்பட்டது. தகவல் கேள்விப்பட்ட போலீசார் விரைந்து வந்து சீனிவாசாவை கைது செய்து விசாரித்து வருகின்றனர் .