கடித்த பாம்பை கரகரவென கடித்துத் துப்பிய கபாலி!

 

கடித்த பாம்பை கரகரவென கடித்துத் துப்பிய கபாலி!

“என் வாழ்வில் இதுமாதிரி ஒரு நபரை பார்த்ததில்லை” என இந்த விவசாயிக்கு மருத்துவம் பார்த்த மருத்துவர் கூறியிருக்கிறார். மேலும், “பாம்பு கடித்தும் இவருக்கு எதுவும் ஆகாமல் இருப்பது மிகவும் ஆச்சரியமளிக்கிறது” என்றும் கூறியுள்ளார்.

விவசாயி ஒருவர் தன்னை கடித்த பாம்பை பழிவாங்குவதற்காக கடித்து துப்பியிருக்கிறார். “என் வாழ்வில் இதுமாதிரி ஒரு நபரை பார்த்ததில்லை” என இந்த விவசாயிக்கு மருத்துவம் பார்த்த மருத்துவர் கூறியிருக்கிறார். மேலும், “பாம்பு கடித்தும் இவருக்கு எதுவும் ஆகாமல் இருப்பது மிகவும் ஆச்சரியமளிக்கிறது” என்றும் கூறியுள்ளார்.

sonalal

 
ஒருவர் மயங்கி கிடக்கிறார் என்று மாதோகஞ்ச் அரசு மருத்துவமனையில் உள்ள 108 மீட்பு வாகனத்திற்கு ஒரு அழைப்பு வந்தது, அவர் உத்தரபிரதேசத்தின் ஹார்டா என்ற பகுதியைச் சேர்ந்த சோனலால் என்பவர். மயக்க நிலையில் கிடந்த இவரை மருத்துவமனையில் அனுமதிருக்கிறார்கள். இவரைப் பரிசோதித்த மருத்துவர்கள் உடலில் ஏதும் கடித்த அடையாளங்கள் காணப்படவில்லை என்று கூறியுள்ளனர். மீண்டும் நினைவு திரும்பியவுடன் என்ன நடந்தது என்பதை அவரிடம் கேட்டுள்ளனர்.  

அதற்கு “பாம்பு ஒன்று என்னைக் கடித்தது, அதனால் நான் அந்த பாம்பை பிடித்து அதன் தலையை கடித்து துப்பிவிட்டேன், அந்த பாம்பு இறந்துவிட்டது, அந்த பாம்பின் தலையை எடுத்துச் சென்று மீண்டும் ஒருமுறை கடித்தேன்” என்றுகூறி அனைவரையும் திகிலடையச் செய்துள்ளார் அந்த விவசாயி.