கடவுள் உருவில் இருக்கும் மனிதருடன் சாமி தரிசனம்: த்ரிஷா நெகிழ்ச்சி!

 

கடவுள் உருவில் இருக்கும் மனிதருடன் சாமி தரிசனம்: த்ரிஷா நெகிழ்ச்சி!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் சேர்ந்து கடவுள் தரிசனம் செய்து வந்ததாக நடிகை த்ரிஷா தனது ட்விட்டர் பக்கத்தில் புகைப்படம் ஒன்றை பகிர்ந்துள்ளார்.

வாரணாசி: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் சேர்ந்து கடவுள் தரிசனம் செய்து வந்ததாக நடிகை த்ரிஷா தனது ட்விட்டர் பக்கத்தில் புகைப்படம் ஒன்றை பகிர்ந்துள்ளார்.

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கி வரும் ‘பேட்ட’ படத்தில், ரஜினி, விஜய் சேதுபதி, சிம்ரன், த்ரிஷா, நவாசுதீன் சித்திக், இயக்குநர் மகேந்திரன், பாபி சிம்ஹா, சசிகுமார், மேகா ஆகாஷ், சனந்த் ரெட்டி, முனீஷ்காந்த் உள்ளிட்ட ஏராளமானோர் நடித்து வருகின்றனர். இப்படத்துக்கு அனிருத் இசையமைத்து வருகிறார்.

’பேட்ட’ படத்தின் ஷூட்டிங் வாரணாசியில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இப்படத்தில் த்ரிஷா-ரஜினி இடையேயான ஃபிளாஷ்பேக் காட்சிகள் இங்கு படமாக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன் நடிகர் ரஜினியுடன் சேர்ந்து உலக புகழ்மிக்க காசி விஸ்வநாதர் கோவிலில் நடிகை த்ரிஷா சாமி தரிசனம் செய்தார். அது தொடர்பான புகைப்படத்தை ட்விட்டரில் பகிர்ந்திருந்தார்.

தற்போது அதைத் தொடர்ந்து தான் ரஜினிகாந்துடன் சென்றதை, மனித உருவில் இருக்கும் கடவுளுடன் சாமி தரிசனம் செய்ததாக நடிகை த்ரிஷா புகைப்படம் ஒன்றை பகிர்ந்துள்ளார். இந்த புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

’பேட்ட’ திரைப்படத்தின் பணிகள் விரைவில் முடிவடைந்து பொங்கல் பண்டிகைக்கு வெளியாகலாம் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.