கடவுளே.. எடப்பாடியின் இந்த விஷயம் மட்டும் மு.க.ஸ்டாலினுக்கு தெரியக்கூடாது..!

 

கடவுளே.. எடப்பாடியின் இந்த விஷயம் மட்டும் மு.க.ஸ்டாலினுக்கு தெரியக்கூடாது..!

தனபால் – எடப்பாடி முட்டல், மோதல் விவகாரம் தெரிய வந்தால் மு.க.ஸ்டாலின் கொண்டாடி தீர்த்து விடுவாரே…

சபாநாயகர் தனபாலை முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஓரங்கட்டுவதாக அவரது ஆதரவாளர்கள் வருத்தப்பட்டு வருகிறார்கள்.edappadipalanisamy

சபாநாயகர் தனபால்  ஆளுங்கட்சிக்கு, அனுசரணையாக  இருந்து வருகிறார். சட்டப்பேரவையில் திமுகவினர் வீசும் பாலை தனபால் லாவகமாக தடுத்து வருகிறார். அவருக்கு எதிராக திமுக கொண்டுவரவிருந்த நம்பிக்கையில்லா தீர்மானத்தை முறியடிக்க எடப்பாடி பலமான ஸ்கெட்ச் போட்டு வைத்திருந்தார். ஆனால், திமுக உல்டாவாக மாறியது. இது ஒருபுறம் கிடக்கட்டும். dhanapaul

இந்த விஷயம் வேறு. சபாநாயகர் தனபாலின் அவிநாசி தொகுதியில் புதிதாக கட்டியிருக்கிற அரசு கலை கல்லுாரியை முதல்வர் எடப்பாடி பழனிசாமி  சமீபத்தில் ‘வீடியோ கான்பரன்சிங்’ மூலம் திறந்து வைத்தார்.  அதே நேரம், அவிநாசி கல்லுாரியில் சபாநாயகர் முன்னிலையில் விழா நடக்கும் என அறிவித்து இருந்தார்கள்.stalin

ஆனால்,  சபாநாயகர் கலந்து கொள்ளவில்லை. ‘கல்லுாரியின் திறப்பு விழாவை வேறொரு தேதியில் திறக்கலாம்’  என சபாநாயகர் சொால்லி இருக்கிறார். ஆனால், முதல்வர் தரப்பு அதை ஏற்றுக்கொள்ளவில்லை.  அவருக்கு ஏற்ற  தேதியில்  திறந்து வைத்து விட்டார். அந்த கோபத்தில்தான், விழாவில்  சபாநாயகர் தனபால் கலந்து கொள்ளவில்லை என்கிறார்கள். தனபால் – எடப்பாடி முட்டல், மோதல் விவகாரம் தெரிய வந்தால் மு.க.ஸ்டாலின் கொண்டாடி தீர்த்து விடுவாரே…