கடன் பிரச்சனையிலிருந்து தப்புவதற்காக நாடகம்? ஊட்டியில் பதுங்கியிருக்கும் பவர் ஸ்டார்!

 

கடன் பிரச்சனையிலிருந்து தப்புவதற்காக நாடகம்? ஊட்டியில் பதுங்கியிருக்கும் பவர் ஸ்டார்!

கடன் பிரச்சினையிலிருந்து தப்பிப்பதற்காக பவர் ஸ்டார் சார்பில் பொய் புகார் அளிக்கப்பட்டுள்ளதா? என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

சென்னை: கடன் பிரச்சினையிலிருந்து தப்பிப்பதற்காக பவர் ஸ்டார் சார்பில் பொய் புகார் அளிக்கப்பட்டுள்ளதா? என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

நடிகர் சந்தானத்தின் தயாரிப்பில் வெளிவந்த ‘கண்ணா லட்டு தின்ன ஆசையா’, ‘ஐ’, ‘கோலி சோடா’ உள்ளிட்ட பல படங்களில் நடித்து பிரபலம் ஆனவர் நடிகர் பவர் ஸ்டார் சீனிவாசன். நேற்று நண்பரை பார்க்கச் சென்ற இவர், வீடு திரும்பவில்லை என அவரது மனைவி ஜூலி, அண்ணா நகர் காவல் நிலையத்தில் இன்று காலை புகார் அளித்தார். அதோடு இன்றி, பவர் ஸ்டாரின் சொத்துக்களை தங்களது பெயரில் எழுதி வைக்கக் கூறி மர்ம நபர்கள் சிலர் மிரட்டல் விடுத்ததாகவும் ஜூலி தனது புகாரில் குறிப்பிட்டிருந்தார்.

இதனையடுத்து, பல்வேறு கோணங்களில் போலீசார் நடத்திய விசாரணையில், நீலகிரி மாவட்டம் உதகையில், பவர் ஸ்டார் சீனிவாசன் பத்திரமாக இருப்பது தெரியவந்துள்ளது. இதைத்தொடர்ந்து, சீனிவாசனை பார்ப்பதற்காக ஜூலி தற்போது உதகைக்கு சென்றிருப்பதாக அவருடைய உறவினர்கள் தகவல் தெரிவித்துள்ளனர்.

பவர் ஸ்டார் சீனிவாசன் மீது பல்வேறு கடன் மோசடி வழக்குகள் நிலுவையில் இருப்பதால், கடன் கொடுத்தவர்களிடம் இருந்து தப்பிப்பதற்காக, காணாமல் போனதாக பவர் ஸ்டார் சீனிவாசன் நாடகமாடுகிறாரா என்ற கோணத்திலும் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.