கடன் தொல்லை தாங்காமல் யூடியூப் உதவியுடன் கள்ளநோட்டு தயாரித்த பெண் கைது

 

கடன் தொல்லை தாங்காமல் யூடியூப் உதவியுடன் கள்ளநோட்டு தயாரித்த பெண் கைது

கடன் தொல்லை தாங்காமல் யூ டியூப்பை பார்த்து கள்ள நோட்டு தயாரித்த பட்டதாரி பெண்ணை போலீசார் கைது செய்தனர். 

கடலூர்: கடன் தொல்லை தாங்காமல் யூ டியூப்பை பார்த்து கள்ள நோட்டு தயாரித்த பட்டதாரி பெண்ணை போலீசார் கைது செய்தனர். 

கடலூர் மாவட்டம் சிதம்பரம் மாரியப்பா நகரை சேர்ந்தவர் பரணிகுமாரி. கணவனை பிரிந்து வாழும் பரணிகுமாரி, தன் இரண்டு பெண் குழந்தைகளின் வாழ்வாதாரத்திற்காக எம்ப்ராயடரி தொழில் செய்து வந்தார். 

கடன் தொல்லையால் அவதிப்பட்ட பரணிகுமாரி, யூடியூப்பில் கள்ள நோட்டு தயாரிப்பதை பார்த்து அதன்படி 2,000 நோட்டுகளை தயாரித்திருக்கிறார். அதனை பழக்கடை ஒன்றில் மாத்த முயற்சித்த போது, கடைக்காரர் சந்தேகப்பட்டு போலீஸாருக்கு தகவல் கொடுத்திருக்கிறார். அதன்பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், பரணிகுமாரியை விசாரித்ததில் கள்ளநோட்டு தயாரிக்கும் வீடியோவை பார்த்து பிரிண்டர் மூலம் ஜெராக்ஸ் எடுத்ததாக ஒப்புக்கொண்டார்.