கடன்காரர்களை கோடீஸ்வரனாக்கும் டி.டி.வி.தினகரன்… அடிக்குது அதிர்ஷ்டம்..!

 

கடன்காரர்களை கோடீஸ்வரனாக்கும் டி.டி.வி.தினகரன்… அடிக்குது அதிர்ஷ்டம்..!

மாவட்ட செயலாளர் பதவி வழங்கப்பட்டது. அதன்பிறகு, கட்சி வளர்ந்ததோ இல்லையோ, இவர் தன்னை வளர்த்துக்கொண்டார்.

லட்சாதிபதி கோடீஸ்வரனாக ஆக வேண்டுமா… உடனே சேலம் மாவட்டத்துக்கு போங்க என்று பேசிக் கொள்கிறார்கள். அதிமுகவில் பிளவு ஏற்பட்டு டி.டி.வி.தினகரன் தலைமையில் அமமுக உதயமானது. இந்நிலையில், ஈரோடு மாவட்டத்திற்கு மாவட்ட செயலாளர்கள் நியமிக்கப்பட்டனர்.

ஆனால், நியமிக்கப்பட்ட மாவட்ட செயலாளர்கள் பலரும் சில மாதங்களிலேயே வேறு  கட்சிக்கு ஜம்ப் ஆகி விட்டார்கள். இதனால், மாவட்ட செயலாளர் பதவி ராசியில்லாத பதவியாக டி.டி.வி.தினகரன் கட்சியில் இருந்து வருகிறது. தற்போது ஈரோடு மாவட்ட செயலாளராக நியமிக்கப்பட்டுள்ள ஒருவர், நிதி நிறுவனம் நடத்தி வந்தார். 

ttv
இதில்  நஷ்டம் ஏற்பட்ட நிலையில் திக்கு தெரியாமல் தவித்த இவருக்கு கட்சியில் மாவட்ட செயலாளர் பதவி வழங்கப்பட்டது. அதன்பிறகு, கட்சி வளர்ந்ததோ இல்லையோ, இவர் தன்னை வளர்த்துக்கொண்டார். புதுப்புது கார்களில் பவனி வருகிறார். ஆளும் கட்சியோடு கூட்டணி அமைத்துக்கொண்டு பல காரியங்களை சாதித்து வருகிறார்.ops

மேலும், இவர் தனது சொந்த ஊரில் உள்ள கூட்டுறவு சங்கத்தில் பொறுப்பில் தொடர்கிறார். ஆளும் கட்சியை எதிர்த்து அரசியல் செய்யாமல் பதுங்கும்  இவர், விரைவில் கட்சி மாற இருப்பதாக நிர்வாகிகள் கிசுகிசுக்கிறார்கள். விரைவில், அமமுகவை விட்டு பறந்துவிடுவார் என பலவாறு பேச்சு அடிபடுகிறது. எப்படியோ, டி.டி.வி.தினகரன் கட்சியில் இருந்தால் தானாகவே லட்சாதிபதி கோடீஸ்வரனாகும்  அதிர்ஷ்டம் இருப்பதாக பேசிக் கொள்கிறார்கள்.