கடனை திருப்பி கேட்டதற்கு தன் ஆபாச புகைப்படங்களை அனுப்பிய இளம்பெண் மீது வழக்கு பதிவு

 

கடனை திருப்பி கேட்டதற்கு தன் ஆபாச புகைப்படங்களை அனுப்பிய இளம்பெண் மீது வழக்கு பதிவு

மண்டபம்: கடனை திருப்பி கேட்டதற்கு தன் ஆபாச புகைப்படங்களை அனுப்பிய இளம்பெண் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

ராமநாதபுரம் மாவட்டம், மண்டபத்தை சேர்ந்த பழனிவாசகம் என்பவருக்கு ப்ரீத்தி என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. அப்போது ப்ரீத்தி தன்னிடம் 2 1/2 லட்சம் ரூபாய் கடன் வாங்கியதாகவும், கடனை திருப்பி கேட்ட போதெல்லாம் ப்ரீத்தி தன்னுடைய ஆபாச புகைப்படங்களை அனுப்பியதாகவும் மண்டபம் காவல்நிலையத்தில் பழனிவாசகம் புகார் அளித்துள்ளார்.

இந்த வழக்கு நீதிமன்றம் வந்த பின்னர், சம்பந்தப்பட்ட பெண்ணின் மீது மோசடி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.