கடந்த 3 மாதங்களில் ஒரு பெண் குழந்தைகூட பிறக்காத கிராமங்கள்!

 

கடந்த 3 மாதங்களில் ஒரு பெண் குழந்தைகூட பிறக்காத கிராமங்கள்!

உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள 132 கிராமங்களில் கடந்த 3 மாதங்களாக ஒரு பெண் குழந்தை கூட பிறக்கவில்லை என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.

உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள 132 கிராமங்களில் கடந்த 3 மாதங்களாக ஒரு பெண் குழந்தை கூட பிறக்கவில்லை என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.

child

உத்தரகாஷி என்ற மாவட்டத்தில் தான் கடந்த 3 மாதங்களாக பெண் குழந்தைகளே பிறக்காத விநோத சம்பவம் அரங்கேறியுள்ளது. அங்குள்ள் 132 கிராமங்களில் கடந்த 3 மாதங்களில் 216 குழந்தைகள் பிறந்துள்ளன. அவை அனைத்துமே ஆண் குழந்தைகள்தான். ஒரு பெண்குழந்தைகள் கூட இல்லை. இதுகுறித்து அப்பகுதியில் விசாரணை மேற்கொண்டு வருவதாகவும், இதற்கான காரணம் விரைவில் கண்டுபிடிக்கப்படும் என்றும் மாவட்ட நீதிபதி ஆஷிஷ் சவுகான் தெரிவித்துள்ளார். 

ஒரு பெண் குழந்தை கூட பிறக்காமல் இருக்க வாய்ப்பில்லை என்றும், அந்த கிராமத்தில் பெண் சுசுக்கொலை நடந்திருக்க கூடும் என்றும் சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.அரசு உடனடியாக தலையிட்டு அந்த மாவட்டம் முழுவதும் முழு கணக்கெடுப்பு நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.