கடத்தல் முயற்சியில் சாலையில் 500 மீட்டர் இழுத்து செல்லப்பட்ட இளம்பெண் பரிதாப பலி: தரங்கம்பாடியில் பரபரப்பு!?

 

கடத்தல் முயற்சியில் சாலையில் 500 மீட்டர்  இழுத்து செல்லப்பட்ட இளம்பெண் பரிதாப பலி:  தரங்கம்பாடியில் பரபரப்பு!?

காரில் கடத்த நடந்த முயற்சியில் படுகாயம் அடைந்த இளம்பெண் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது

தரங்கம்பாடி: காரில் கடத்த நடந்த முயற்சியில் படுகாயம் அடைந்த இளம்பெண் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

நாகை மாவட்டம் தரங்கம்பாடி அருகே உள்ள கேசவன்பாளையத்தை சேர்ந்தவர் மதியழகன். இவருடைய மகள் கவியரசி. இவர் பொள்ளாச்சியில் பனியன் கம்பெனியில் வேலை செய்து வந்துள்ளார். விடுமுறைக்காக வீட்டிற்கு வந்த அவர் விடுமுறை முடிந்து மீண்டும் பொள்ளாச்சி கிளம்ப கடந்த 6 ஆம் தேதி தோழிகளுடன் தரங்கம்பாடி பேருந்து நிலையதிற்கு சென்றுள்ளார். 

kidnap

அப்போது அந்த வழியாக வந்த காரில் இருந்தவர்கள் காரை நிறுத்தாமல் கவியரசியை காரில் உள்ளே இழுக்க முயன்றுள்ளனர். சுதாரித்துக் கொண்ட கவியரசி அவர்களிடம் இருந்து தப்பிக்க முயன்ற போது, கார்  வேகமாக சென்றுள்ளது. இதனால் சாலையில்  கவியரசி நிலை தடுமாறி கீழே விழுந்துள்ளார். ஆனாலும் அந்த கும்பல் காரை நிறுத்தாமல் கவியரசியை சுமார் 500 மீட்டர் தொலைவுக்கு சாலையில் தரதரவென இழுத்து சென்றுள்ளது.  இதையடுத்து அவ்வழியே பேருந்து ஒன்று வர அந்த கும்பல் கவியரசியை விட்டுவிட்டுச் சென்றுள்ளனர். இந்த சம்பவத்தால் படுகாயம் அடைந்த கவியரசியை திருவாரூர் மருத்துவமனையில்  அனுமதித்தனர். இருப்பினும் சிகிச்சை பலனின்றி கவியரசு நேற்று முன்தினம் உயிரிழந்தார். 

death

இந்த சம்பவத்தை பொறையாறு போலீசார் விபத்து வழக்காகப் பதிவு செய்ததாகக் கூறப்படுகிறது. இதைக் கண்டித்து கவியரசியின் உறவினர்கள்  மற்றும் பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். பொறையாறு போலீஸ் நடத்திய பேச்சுவார்த்தையால்  போராட்டம் கைவிடப்பட்டது குறிப்பிடத்தக்கது.