கடத்தப்பட்ட 18 மாத குழந்தைக்கு கொரோனா: கடத்தியவர் உள்பட 22 பேர் தனிமைப்படுத்தபட்ட சம்பவம்!

 

கடத்தப்பட்ட 18 மாத குழந்தைக்கு கொரோனா: கடத்தியவர் உள்பட 22 பேர் தனிமைப்படுத்தபட்ட சம்பவம்!

இதை தொடர்ந்து அந்த நபர் கைது செய்யப்பட்டார். தனக்கு பிறந்த குழந்தை இறந்து விட்டது

ஹைதராபாத்தில் கடந்த 13 ஆம் தேதி  சாலையோரத்தில் வசிக்கும் 22 வயது பெண் ஒருவரின் 18 மாத ஆண் குழந்தை ஒன்று காணாமல் போனது. இதுகுறித்து அந்த பெண் போலீசில் புகார் அளித்தார். 

புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் அங்கிருந்த  சிசிடிவி காட்சிகளை போலீசார் ஆய்வு செய்ததில்  27 வயதான ஒருவர், குழந்தையிடம் பழங்களை கொடுத்து தனது இரு சக்கரவாகனத்தில் கடத்திச் சென்றது தெரியவந்தது. இதை தொடர்ந்து அந்த நபர் கைது செய்யப்பட்டார். தனக்கு பிறந்த குழந்தை இறந்து விட்டது. அதனால் தான் குழந்தை மீது இருந்த ஆசையில் கடத்தினேன் என்று அவர் கூறியுள்ளார். 

dd

இதை தொடர்ந்து குழந்தையை தாயிடம் ஒப்படைக்கலாம் என்று பார்த்தால் குழந்தையின் தாய் மதுவுக்கு அடிமையானவர் என போலீசாருக்கு தெரியவந்துள்ளது.  இதனால் போலீசார் அந்த குழந்தையை குழந்தைகள் நல வாரியத்திடம்  ஒப்படைத்தனர். 

gg

இந்நிலையில அப்போது குழந்தைக்கு எடுக்கபட்ட மருத்துவ சோதனையில் குழந்தைக்கு கொரோனா இருப்பது தெரியவந்தது. இதனால் குழந்தையுடன் தொடர்புடைய  தாயார், குழந்தையைக் கடத்தியவர் மற்றும் அவரது குடும்பத்தினர், போலீசார், பத்திரிகையாளர்கள் என மொத்தம் 22 பேர் தற்போது தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.