கடக ராசி குருபெயர்ச்சி பலன்கள்(2018-2019)

 

கடக ராசி குருபெயர்ச்சி பலன்கள்(2018-2019)

2018-2019 குருபெயர்ச்சி கடக  ராசி நேயர்களுக்கு எப்படி இருக்கும் என்பதை பற்றி இந்த பதிவில் விரிவாக பார்போம்

கடகம்:

கடகராசிக்கு அதிபதியாக சந்திரன் விளங்குவதால் நீங்கள் மிகவும் அழகும், பொலிவும் நிறைந்தவராக விளங்குவீர்கள்.

உங்கள்ராசிக்கு 6 மற்றும் 9க்கு அதிபதியான குருபகவான் இதுவரை உங்கள் ராசிக்கு 4ஆம் இடத்தில் இருந்து பல்வேறு இன்னல்களை கொடுத்துக்கொண்டு இருந்தார்.

குருபகவான் வருகின்ற அக்டோபர் மாதம்4ஆம்தேதி முதல் உங்கள் ராசிக்கு5ஆம்இடமாகிய விருச்சிகத்தில் சஞ்சரிக்க உள்ளதால் தாராள பணவரவு,சுபகாரியங்கள் கைகூடும் அமைப்பு,தொழிலில் முன்னேற்றம்,அசையும் அசையா சொத்துசேர்க்கை,புத்திரவழியில் மகிழ்ச்சி,கடன்கள்குறையும்அமைப்புஏற்படும் .

குருபகவான் விருச்சிகராசியில் இருந்து உங்களது ராசிக்கு 9 ஆம் இடமான பாக்கியஸ்தானத்தினை பார்ப்பதால் அந்நிய முதலீடுகள் மூலம் நன்மைகள் அதிகரிக்கும் வாய்ப்புகள் உண்டு .தொழிலில் முன்னேற்றம் அதிகரிக்கும், சமுதாயத்தில் மதிப்பு,மரியாதை மேலோங்கும் காலகட்டமாக இந்த குருபெயர்ச்சி அமைந்துள்ளது .

குருபகவான் விருச்சிகராசியில் இருந்து உங்களதுராசிக்கு 11 ஆம் இடமான லாபஸ்தானத்தினை குருபார்பதால் எடுக்கின்ற அனைத்துகாரியங்களிலும் வெற்றிகள் கிடைக்கும் .உங்களை விட வயதில் மூத்தசகோதரர்கள் மூலம் மிகுந்தநன்மைகள் நடைபெறும்.குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும்,மேலும் வருமானம் கணிசமாக உயர்வதற்கு வாய்ப்புகள்அதிகம்.

குருபகவான் விருச்சிகராசியில் இருந்து உங்களது உங்களது ராசியையே குருபார்ப்பதால் தன்னம்பிக்கை, தைரியம் மேலோங்கும் பெரியமனிதர்களின் நட்பு கிடைக்கும் எடுக்கின்ற அனைத்து காரியங்களிலும் வெற்றிகள் கிடைக்கும்.

கடகம் 1

மாணவர்கள்: கடகராசி மாணவர்களுக்கு சிறப்பான ஆண்டாக அமைய வாய்ப்புகள் அதிகம்.வெளிநாடு சென்று படிப்பதற்கு பண உதவிகள் கிடைக்கும் .

கடகம் 2

பெண்கள் : கடகராசி பெண்களுக்கு மிகவும் ஏற்றமான ஆண்டாக இருக்கும்.நினைத்த காரியம் கை கூடும். கடக ராசி பெண்களுக்கு விரைவில் திருமணம் நடைபெற வாய்ப்புகள் அதிகம்.பெண்கள் புது தொழில் துவங்க அரசாங்க உதவிகள் கிடைக்கும்.தொழில் துறையினருக்கு வருமானம் பெருகும்.

கடகம் 3

கலைஞர்கள் : கடகராசி கலைத்துறையினருக்கு மிகவும் சிறப்பான ஆண்டாக அமைவதற்கு வாய்ப்புகள் அதிகம் .நடிகர்,நடிகையர், மற்றும் இயக்குனர்கள் போன்ற கலைத்துறையினருக்கு வருமானம் அதிகமாகும்.

கடகம் 4

அரசியல்வாதிகள்: கடகராசி அரசியல்வாதிகளுக்கு வருகின்ற குருபெயர்ச்சி மிகவும் சிறப்பான ஆண்டாக அமையும் .வெற்றி வாய்ப்புகள் வீடு தேடி வரும் காலகட்டமாக இந்த குருபெயர்ச்சி அமைந்துள்ளது.

kadakam 5

விவசாயிகள் : கடகராசி விவசாயிகளுக்கு விவசாயம் சார்ந்ததொழிலில் அதிக நன்மை உண்டாக்கும். விவசாயத்திற்கு தேவையான நீர்பாசன வசதிகள் கிடைக்கும். விவசாய கடன் ரத்தாவதற்கு வாய்ப்புகள் அதிகம்.

kadakam 6

பரிகாரம்: கடகராசியில் பிறந்தவர்களுக்கு சுவாமிமலை முருகன் கோயிலுக்கும் மற்றும் திருப்பரங்குன்றம் முருகன் கோயிலுக்கும் சென்று வர இந்த குரு பெயர்ச்சியில் சகல நன்மைகளையும் பெறலாம்.