கஞ்சாவுக்கு அடிமையான தம்பி.. கழுத்தை நெரித்துக் கொலை செய்த அண்ணன் !

 

கஞ்சாவுக்கு அடிமையான தம்பி.. கழுத்தை நெரித்துக் கொலை செய்த அண்ணன் !

சமீப காலமாகப் போதைப்பொருள் தாக்கம் இளைஞர்களிடையே அதிகமாக உள்ளது. தமிழகத்தில் போதைப் பொருளால் உபயோகிப்பதால் நிறைய விபரீதங்கள் நடக்கின்றன.

சமீப காலமாகப் போதைப்பொருள் தாக்கம் இளைஞர்களிடையே அதிகமாக உள்ளது. தமிழகத்தில் போதைப் பொருளால் உபயோகிப்பதால் நிறைய விபரீதங்கள் நடக்கின்றன. இந்நிலையில், போதைப் பொருளுக்கு அடிமையான தம்பியை அண்ணன் கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

ttn

மதுரை வண்டியூர் பகுதியில் வசித்து வரும் சிக்கந்தர் மைதீன்- ஹபீபா பேகம். இவர்களுக்கு யாசர் அராபத், அசாருதீன் என்ற இரண்டு மகன்கள் உள்ளனர். இதில் தம்பி அசாருதீன் கடந்த சில மாதமாகக் கஞ்சாவுக்கு அடிமையாகி வீட்டில் இருந்த பணத்தை எல்லாம் எடுத்து சென்று கஞ்சா வாங்கியுள்ளார். அதுமட்டுமில்லாமல் அந்த காசு போதவில்லை என்று அவரது தாயிடம் அடிக்கடி காசு கேட்டு தொந்தரவு செய்து வந்துள்ளார். இதனை அண்ணன் யாசர் அராபத் பலமுறை கண்டித்தும் அசாருதீன் கேட்கவில்லையாம். இதனால் ஆத்திரமடைந்த யாசரும் அவரது தாயாரும் அசாருதீனின் கை, கால்களைக் கட்டி கழுத்தை நெரித்துக் கொலை செய்துள்ளனர். 

ttn

இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த அண்ணா நகர் போலீசார் யாசர் மற்றும் ஹபீபாவை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், அசாருதீனின் உடல் பிரேதப் பரிசோதனைக்காக இராஜாஜி மருத்துவமனை அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.