கஜா புயல்; முதல்வர் நிவாரண நிதியில் எவ்வளவு சேர்ந்திருக்கிறது தெரியுமா?

 

கஜா புயல்; முதல்வர் நிவாரண நிதியில் எவ்வளவு சேர்ந்திருக்கிறது தெரியுமா?

கஜா புயலுக்கான முதல்வர் நிவாரண நிதியில் எவ்வளவு தொகை சேர்ந்திருக்கிறது என்ற தகவலை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.

சென்னை: கஜா புயலுக்கான முதல்வர் நிவாரண நிதியில் எவ்வளவு தொகை சேர்ந்திருக்கிறது என்ற தகவலை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.

கஜா புயல் காரணமாக முதல்வர் நிவாரண நிதிக்கு பல்வேறு தரப்பினர் நிதி வழங்கி வருகின்றனர். இந்நிலையில், கஜா புயல் முதல்வர் நிவாரண நிதியில் இதுவரை எவ்வளவு தொகை சேர்ந்திருக்கிறது என்ற தகவலை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.

இதுகுறித்து அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில், “கஜா” புயல் நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம், கடலூர், திண்டுக்கல், சிவகங்கை, கரூர், திருச்சி உள்ளிட்ட மாவட்டங்களில் வரலாறு காணாத பாதிப்புகளை ஏற்படுத்தியது.

வாழ்வாதாரங்களை இழந்த மக்களுக்கு உதவிடவும், நிவாரணம் மற்றும் சீரமைப்பு பணிகளை மேற்கொள்ளவும், முதல்-அமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு நன்கொடைகள் வழங்குமாறு முதல்வர் எடப்பாடி பழனிசாமி பத்திரிகை வாயிலாக நாட்டு மக்களுக்கு வேண்டுகோள் விடுத்தார்.

இந்த வேண்டுகோளினை ஏற்று, முதல்-அமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு எடப்பாடி பழனிசாமியை நேரில் சந்தித்து தொழில் அதிபர்கள், கல்வியாளர்கள், நடிகர்கள், அரசியல் பிரமு கர்கள் பலர் நன்கொடை வழங்கினார்கள்.

மேலும் பொதுமக்களும் நேரடியாகவும், ஆன்-லைன் மூலமாகவும் முதல்-அமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு வழங்கிய நன்கொடைகளை சேர்த்து, இதுவரை கிடைத்த தொகை 13 கோடியே 32 லட்சத்து 67 ஆயிரத்து 288 ரூபாயாகும் என கூறப்பட்டுள்ளது.