கஜா புயல் பாதிப்பு; விவசாயி தற்கொலை

 

கஜா புயல் பாதிப்பு; விவசாயி தற்கொலை

கஜா புயல் ஏற்படுத்திய பாதிப்பை கண்டு ஒரத்தநாடை சேர்ந்த பாண்டி என்ற விவசாயி தற்கொலை செய்துகொண்டார்.

தஞ்சாவூர்: கஜா புயல் ஏற்படுத்திய பாதிப்பை கண்டு ஒரத்தநாடை சேர்ந்த பாண்டி என்ற விவசாயி தற்கொலை செய்துகொண்டார்.

கஜா புயல் நாகை, திருவாரூர், தஞ்சை, புதுக்கோட்டை உள்ளிட்ட மாவட்டங்களை புரட்டி போட்டிருக்கிறது. அவர்களின் வாழ்வாதாரம் தற்போது கேள்விக்குறியாகியுள்ளது. ஏராளமான தென்னைகள், வாழை போன்றவைகள் அழிந்துள்ளதால் அவர்களின் வாழ்வாதாரம் ஏறத்தாழ கால் நூற்றாண்டுக்கு பின்னோக்கி சென்றுள்ளது. பாதிக்கப்பட்டவர்களுக்கு நிச்சயம் உதவி செய்யப்படும் என மத்திய, மாநில அரசுகள் உறுதியளித்துள்ளன.

இந்நிலையில், கஜா புயலால் முற்றிலும் அழிந்த தென்னை மரங்களை கண்டு மனமுடைந்த விவசாயி பாண்டி என்பவர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். தஞ்சை மாவட்டம் ஒரத்தநாட்டை சேர்ந்த பாண்டி 3 தினங்களாக காணாமல் போன சூழலில் இன்று அவர் சடலமாக மீட்கப்பட்டார். இந்த சம்பவம் பலத்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.