கஜா புயல் பாதிப்பு: லைகா நிறுவனம் ரூ.1 கோடி நிதியுதவி!

 

கஜா புயல் பாதிப்பு: லைகா நிறுவனம் ரூ.1 கோடி நிதியுதவி!

கஜா புயலால் பாதிக்கப்பட்டுள்ள டெல்டா பகுதி மக்களுக்கு லைகா நிறுவனம் ரூ.1.01 கோடி நிதியுதவி வழங்கியுள்ளது.

சென்னை: கஜா புயலால் பாதிக்கப்பட்டுள்ள டெல்டா பகுதி மக்களுக்கு லைகா நிறுவனம் ரூ.1.01 கோடி நிதியுதவி வழங்கியுள்ளது.

சோறுடைத்த சோழ நாடு என பெயர் பெற்ற டெல்டா மாவட்டங்கள் தற்போது சோறில்லாமல் இருந்து வருகின்றன. கரையை கடந்து டெல்டா மாவட்டங்களை மண்ணுக்குள் அமுக்கி சென்ற கஜா புயலினால், மக்கள் அடிப்படை வசதிகள் எதுவும் இல்லாமல் கடும் அவதிக்குள்ளாகி இருக்கின்றனர்

கஜா புயலில் சிக்கி சுமார் 40-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில், அரசு தரப்பு, தன்னார்வலர்கள் என ஏராளமானோர் மீட்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து நிவாரண பொருட்களும் சென்ற வண்ணம் இருக்கின்றன.

lyca

சென்னை வெள்ளம், கேரள வெள்ளத்தையடுத்து, தமிழ் திரையுலகினர் ஒன்றிணைந்து டெல்டா பகுதி மக்களுக்கு நிவாரண பொருட்களையும், நிதியுதவியும் அளித்து வருகின்றனர். இந்நிலையில், தமிழ் திரையுலகின் முன்னணி தயாரிப்பு நிறுவனமான லைகா நிறுவனம் ரூ.1.01 கோடியே ஒரு லட்சம் முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு வழங்கப்படும் என தெரிவித்துள்ளது.