கஜா புயல் பாதிப்பு : நடிகை ஸ்ரீரெட்டி என்ன செய்தார் தெரியுமா?

 

கஜா புயல் பாதிப்பு : நடிகை ஸ்ரீரெட்டி என்ன செய்தார் தெரியுமா?

கஜா புயலால் பெரும் அளவில் பாதிக்கப்பட்ட டெல்டா மாவட்ட மக்களுக்கு நடிகை ஸ்ரீரெட்டி நிவாரண உதவி வழங்கியுள்ளார்.

சென்னை: கஜா புயலால் பெரும் அளவில் பாதிக்கப்பட்ட டெல்டா மாவட்ட மக்களுக்கு நடிகை ஸ்ரீரெட்டி நிவாரண உதவி வழங்கியுள்ளார்.

பட வாய்ப்புகள் தருவதாகக் கூறி நடிகர்களும், இயக்குநர்களும் தன்னை அனுபவித்துவிட்டு ஏமாற்றியதாகக் கூறி புயலைக் கிளப்பி இருந்தவர் நடிகை ஸ்ரீரெட்டி. அவரின் பட்டியலில் முதல் ஆளாக இடம் பெற்றிருந்தவர் ராகவா லாரன்ஸ், அதன்பின் ஸ்ரீகாந்த், ஏ.ஆர். முருகதாஸ் என அடுத்தடுத்த அதிர்ச்சிகளை அள்ளி வீசியிருந்தார் ஸ்ரீரெட்டி. இதன் பின் தன் மீது பாலியல் குற்றச்சாட்டை முன்வைத்த ஸ்ரீரெட்டிக்கு தனது படத்தில் நடிக்க வாய்ப்பு கொடுத்ததோடு, அதற்கான அட்வான்ஸ்  தொகையும் அளித்தார் ராகவா லாரன்ஸ். இதையடுத்து ரெட்டி டைரி என்ற படத்திலும் ஸ்ரீரெட்டி நடித்து வருகிறார்.

இந்நிலையில் சில நாட்களுக்கு முன்பு கஜா புயலால் பெரும் அளவில் பாதிக்கப்பட்ட டெல்டா மாவட்டத்திற்குப் பிரபலங்கள் பலரும் தங்களால் முடிந்த உதவியைச் செய்துவரும் நிலையில், நடிகை ஸ்ரீரெட்டியும் அந்த வரிசையில் இடம் பிடித்துள்ளார்.

கஜா புயலால் பாதிக்கப்பட்ட 300 மக்களுக்கு தலா இரண்டு கிலோ அரிசியும், மெழுகுதிரி , வாட்டர் பாட்டில்,  பிஸ்கட் ஆகியவற்றை வழங்கியுள்ளார் நடிகை ஸ்ரீரெட்டி. இதனைத் தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ள  அவர், இந்த உலகமே என்னை தனிமைப்படுத்திய போது எனக்கு ஆறுதலாக இருந்தது தமிழ் மக்கள் மட்டுமே என்றும் அதற்காக நன்றி தெரிவித்துக்கொள்வதாகவும்குறிப்பிட்டுள்ளார்.