கஜா புயல்: நடிகர் சிவக்குமார் குடும்பத்தினர் ரூ.50லட்சம் நிதியுதவி!
கஜா புயல் நிவாரண பணிக்காக நடிகர் சிவக்குமார் குடும்பத்தினர் தன்னார்வ தொண்டு நிறுவனத்தின் மூலம் நிதியுதவி வழங்கியுள்ளனர்.
சென்னை: கஜா புயல் நிவாரண பணிக்காக நடிகர் சிவக்குமார் குடும்பத்தினர் தன்னார்வ தொண்டு நிறுவனத்தின் மூலம் நிதியுதவி வழங்கியுள்ளனர்.
சோறுடைத்த சோழ நாடு என பெயர் பெற்ற டெல்டா மாவட்டங்கள் தற்போது சோறில்லாமல் இருந்து வருகின்றன. கரையை கடந்து டெல்டா மாவட்டங்களை மண்ணுக்குள் அமுக்கி சென்ற கஜா புயலினால், மக்கள் அடிப்படை வசதிகள் எதுவும் இல்லாமல் கடும் அவதிக்குள்ளாகி இருக்கின்றனர்.
கஜா புயலில் சிக்கி சுமார் 40-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில், அரசு தரப்பு, தன்னார்வலர்கள் என ஏராளமானோர் மீட்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து நிவாரண பொருட்களும் சென்ற வண்ணம் இருக்கின்றன.
On behalf of #ActorSivakumar family #SriSivakumar @Suriya_offl @Karthi_Offl #Jyotika & @2D_ENTPVTLTD donating a sum of Rs. 50 Lakhs through NGOs towards #GajaCycloneRelief #GajaCyclone #LetsAllJoinHands #prayfordelta
— rajsekarpandian (@rajsekarpandian) November 19, 2018
இந்நிலையில், கஜா புயல் நிவாரண பணிக்காக நடிகர் சிவக்குமார், சூர்யா, கார்த்தி, ஜோதிகா ஆகியோர் தன்னார்வ தொண்டு நிறுவனம் ஒன்றுக்கு ரூ.50 லட்சம் நிதியுதவி வழங்கியுள்ளனர்.
கஜா புயல் ஆடிய கோர தாண்டவத்தின் சேதங்களில் இருந்து மக்களை மீட்டெடுக்க உதவும் வகையிலும், மறுசீரமைப்பு, மறு கட்டமைப்பு பணிகளுக்கு உதவிடும் வகையில் நிதி வழங்கியுள்ளதாக கூறப்படுகிறது.