கஜா புயல்; திமுக நிதியை முதல்வரிடம் வழங்கினார் துரைமுருகன்

 

கஜா புயல்; திமுக நிதியை முதல்வரிடம் வழங்கினார் துரைமுருகன்

கஜா புயல் நிவாரண பணிக்காக திமுக சார்பில் ஒதுக்கிய ரூ 1 கோடி நிதியை முதல்வர் பழனிசாமியிடம் அக்கட்சியின் பொருளாளர் துரைமுருகன் வழங்கினார்.

சென்னை: கஜா புயல் நிவாரண பணிக்காக திமுக சார்பில் ஒதுக்கிய ரூ 1 கோடி நிதியை முதல்வர் பழனிசாமியிடம் அக்கட்சியின் பொருளாளர் துரைமுருகன் வழங்கினார்.

சோறுடைத்த சோழ நாடு என பெயர் பெற்ற டெல்டா மாவட்டங்கள் தற்போது சோறில்லாமல் இருந்து வருகின்றன. கஜா புயல் அந்த மாவட்டங்களின் வளர்ச்சியை 20 வருடங்களுக்கு பின்னோக்கி இழுத்து சென்றுள்ளது. அரசு தரப்பு, தன்னார்வலர்கள் என அங்கு அங்கு மீட்பு பணிகள் மும்முரமாக நடந்து வருகிறது. மேலும், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து நிவாரண பொருட்களும் சென்ற வண்ணம் இருக்கின்றன. தமிழக அரசு சார்பில் ரூ 1000 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையே திமுக சார்பில் கஜா புயல் நிவாரண பணிகளுக்காக ரூ 1 கோடி நிதி ஒதுக்கி அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். இந்நிலையில், திமுகவின் பொருளாளர் துரைமுருகன், கிரீன்வேஸ் சாலையில் இருக்கும் முதல்வர் பழனிசாமியின் இல்லத்திற்கு சென்று ரூ 1 கோடி நிதியை வழங்கினார்.