கஜா புயல்: கனடா இசை நிகழ்ச்சி வருவாயை நிவாராணமாக வழங்கும் ஏ.ஆர்.ரகுமான்!

 

கஜா புயல்: கனடா இசை நிகழ்ச்சி வருவாயை நிவாராணமாக வழங்கும் ஏ.ஆர்.ரகுமான்!

கனடாவில் அடுத்த மாதம் நடைபெறவுள்ள இசை நிகழ்ச்சி மூலம் கிடைக்கும் நிதியை கஜா புயல் நிவாரணத்திற்கு வழங்கவுள்ளதாக ஏ.ஆர்.ரகுமான் தெரிவித்துள்ளார்.

சென்னை: கனடாவில் அடுத்த மாதம் நடைபெறவுள்ள இசை நிகழ்ச்சி மூலம் கிடைக்கும் நிதியை கஜா புயல் நிவாரணத்திற்கு வழங்கவுள்ளதாக ஏ.ஆர்.ரகுமான் தெரிவித்துள்ளார்.

சோறுடைத்த சோழ நாடு என பெயர் பெற்ற டெல்டா மாவட்டங்கள் தற்போது சோறில்லாமல் இருந்து வருகின்றன. கரையை கடந்து டெல்டா மாவட்டங்களை மண்ணுக்குள் அமுக்கி சென்ற கஜா புயலினால், மக்கள் அடிப்படை வசதிகள் எதுவும் இல்லாமல் கடும் அவதிக்குள்ளாகி இருக்கின்றனர்

கஜா புயலில் சிக்கி சுமார் 40-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில், அரசு தரப்பு, தன்னார்வலர்கள் என ஏராளமானோர் மீட்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து நிவாரண பொருட்களும் சென்ற வண்ணம் இருக்கின்றன.

சென்னை வெள்ளம், கேரள வெள்ளத்தையடுத்து, தமிழ் திரையுலகினர் ஒன்றிணைந்து டெல்டா பகுதி மக்களுக்கு நிவாரண பொருட்களையும், நிதியுதவியும் அளித்து வருகின்றனர். இந்நிலையில், இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான், கனடாவின் டொரண்டோ நகரில் அடுத்த மாதம் நடைபெறவுள்ள இசை நிகழ்ச்சி மூலம் கிடைக்கும் நிதியை முழுவதுமாக புயல் பாதித்த மாவட்டங்களின் நிவாரணத்துக்கு வழங்கவுள்ளதாக தெரிவித்துள்ளார்.