கஜா புயல்: ஏர் இந்தியாவில் நிவாரண பொருட்கள் அனுப்ப கட்டணம் இல்லை

 

கஜா புயல்: ஏர் இந்தியாவில் நிவாரண பொருட்கள் அனுப்ப கட்டணம் இல்லை

கஜா புயலுக்கு ஏர் இந்தியா விமானம் மூலம் நிவாரண பொருட்கள் அனுப்ப சரக்கு கட்டணம் வசூலிக்கப்படாது என மத்திய விமான போக்குவரத்துறை அமைச்சர் சுரேஷ் பிரபு அறிவித்துள்ளார்

டெல்லி: கஜா புயலுக்கு ஏர் இந்தியா விமானம் மூலம் நிவாரண பொருட்கள் அனுப்ப சரக்கு கட்டணம் வசூலிக்கப்படாது என மத்திய விமான போக்குவரத்துறை அமைச்சர் சுரேஷ் பிரபு அறிவித்துள்ளார்.

கஜா புயலால் டெல்டா மாவட்டங்கள் கடுமையான பாதிப்புக்கு உள்ளாகியுள்ளன. பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. வீடுகளை இழந்த மக்கள் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுளனர்.

இதனிடையே, புயலால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் போர்க்கால அடிப்படையில் மீட்பு மற்றும் நிவாரண பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. அதேபோல், புயல் பாதிக்கப்பட்ட மாவட்டங்களை சேர்ந்த மக்களுக்கு ஏராளமானோர் தங்களால் இயன்ற உதவிகளை வழங்கி வருகின்றனர். மேலும், கஜா புயலால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களுக்கு நிவாரண உதவிகள் வழங்க விரும்புவர்கள் தொடர்பு கொள்ள அதிகாரிகளையும் தமிழக அரசு நியமனம் செய்துள்ளது.

நாடு முழுவதும் இருந்து பாதிக்கப்பட்ட மாவட்டங்களுக்கு பால், அரிசி, பால் பவுடர், தண்ணீர் பாட்டில்கள், போர்வை போன்ற அத்தியாவசிய உதவிப் பொருட்கள் அனுப்பப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், கஜா புயல் பாதிப்புக்கு ஏர் இந்தியா விமானம் மூலம் அனுப்பப்படும் நிவாரண பொருட்களுக்கு சரக்குக் கட்டணம் வசூலிக்கப்படாது என மத்திய விமான போக்குவரத்துறை அமைச்சர் சுரேஷ் பிரபு அறிவித்துள்ளார்.