கஜா புயலால் ரூ.10 ஆயிரம் கோடி அளவுக்கு சேதம்; நிவாரண பணிகளுக்கு ரூ.500 கோடி ஒதுக்கும் தமிழக அரசு?

 

கஜா புயலால் ரூ.10 ஆயிரம் கோடி அளவுக்கு சேதம்; நிவாரண பணிகளுக்கு ரூ.500 கோடி ஒதுக்கும் தமிழக அரசு?

கஜா புயலால் முதற்கட்டமாக ரூ.10 ஆயிரம் கோடி அளவுக்கு சேதம் ஏற்பட்டுள்ளதாக தமிழக அரசு கணக்கிட்டுள்ளதாகவும் அதுகுறித்து முதல்வர் ஆலோசனை நடத்தியதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

சென்னை: கஜா புயலால் முதற்கட்டமாக ரூ.10 ஆயிரம் கோடி அளவுக்கு சேதம் ஏற்பட்டுள்ளதாக தமிழக அரசு கணக்கிட்டுள்ளதாகவும் அதுகுறித்து முதல்வர் ஆலோசனை நடத்தியதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

கஜா புயலால் தஞ்சாவூர், நாகப்பட்டினம், திருவாரூர் ஆகிய மூன்று மாவட்டங்களும் புதுக்கோட்டை மாவட்டத்தின் சில பகுதிகளும் கடுமையான சேதத்தை சந்தித்துள்ளன. புயலால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் போர்க்கால அடிப்படையில் மீட்பு மற்றும் நிவாரண பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. சுமார் 1 லட்சத்து 70 ஆயிரம் மரங்களும்,1 லட்சத்து 17 ஆயிரத்துக்கும் அதிகமான வீடுகளும் சேதம் அடைந்து இருக்கின்றன.

புயலில் சிக்கி சுமார் 40-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். அவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.10 லட்சம் வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. புயலில் உயிரிழந்த ஆடு, மாடுகளுக்கும் இழப்பீடு வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், கஜா புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்குவது தொடர்பாக முதல்வர்  தலைமையில்  இன்று தலைமை செயலகத்தில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில்  துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், மூத்த அமைச்சர்கள் மற்றும் உயர் அதிகாரிகள் பங்கேற்றனர். 

அதன் முடிவில், தற்போது முதல் கட்டமாக கஜா புயலால் ரூ.10 ஆயிரம் கோடி அளவுக்கு சேதம் ஏற்பட்டு இருப்பதாக  தமிழக அரசு கணக்கிட்டு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. முதல் கட்டமாக நிவாரண பணிகளுக்கு ரூ.500 கோடி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.