கஜா புயலால் பாதிப்பு ஏற்பட்ட பகுதிகளில் மு.க.ஸ்டாலின் நேரில் ஆய்வு

 

கஜா புயலால் பாதிப்பு ஏற்பட்ட பகுதிகளில் மு.க.ஸ்டாலின் நேரில் ஆய்வு

கஜா புயலால் பாதிப்பு ஏற்பட்ட பகுதிகளில் திமுக தலைவர் ஸ்டாலின் நேரில் ஆய்வு மேற்கொண்டு மக்களிடம் குறைகளை கேட்டறிந்தார்

நாகை: கஜா புயலால் பாதிப்பு ஏற்பட்ட பகுதிகளில் திமுக தலைவர் ஸ்டாலின் நேரில் ஆய்வு மேற்கொண்டு மக்களிடம் குறைகளை கேட்டறிந்தார்.

வங்கக் கடலில் மையம் கொண்டிருந்த கஜா புயலானது வேதாரண்யம் – நாகை இடையேகரையை கடந்தது. இதன் காரணமாக  120 கிலோ மீட்டர் வேகத்தில் மிக பலத்த சூறாவளிக் காற்றுடன் கனமழை கொட்டித் தீர்த்தது.

புயலில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 38-ஆக உயர்ந்துள்ளது. புயல் கரையை கடந்த போது பலத்த காற்று வீசியதால் ஏராளமான மரங்கள் முறிந்து விழுந்துள்ளன. குடிசை வீடுகள் பல காற்றில் பறந்த நிலையில் மின்கம்பங்களும் ஆங்காங்கே சாய்ந்து விழுந்துள்ளன. தொலைத்தொடர்பு முற்றிலும் துண்டிக்கப்பட்டுள்ளது. மின்சார விநியோகமும் தடை செய்யப்பட்டுள்ளது. மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. ஏராளமான மக்கள் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

நாகை, திருவாரூர், கடலூர், தஞ்சாவூர்,  புதுக்கோட்டை, ராமநாதபுரம் உள்ளிட்ட பகுதிகளில் கடுமையான சேதத்தை கஜா புயல் ஏற்படுத்திச் சென்றுள்ளது. குறிப்பாக, நாகை மாவட்டம் வேதாராண்யம், தரங்கம்பாடி உள்ளிட்ட இடங்களில் பலத்த சேதம் ஏற்பட்டது. சேதமடைந்த பகுதிகளில் சீரமைப்புப் பணிகள் தொடங்கி நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில், நாகை மாவட்டத்தில் புயலால் பதிப்பு ஏற்பட்ட பகுதிகளில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நேரில் ஆய்வு மேற்கொண்டு நிவாரணப் பொருட்களை வழங்கி மக்களுக்கு ஆறுதல் கூறினார். முன்னதாக, புயலுக்கு முன் தமிழக அரசு மேற்கொண்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுக்கு ஸ்டாலின் பாராட்டு தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.