கஜானாவில் இருந்து ரூ.1000… கட்சியிலிருந்து ரூ.1000… அதிமுக அசத்தல் ப்ளான்..!

 

கஜானாவில் இருந்து ரூ.1000… கட்சியிலிருந்து ரூ.1000… அதிமுக அசத்தல் ப்ளான்..!

மக்கள் செல்வாக்குள்ள தொண்டர்கள் அதிர்ச்சியில் இருக்கிறார்கள். அவர்களை சரிகட்டி ஓட்டு வாங்கி கவுன்சிலர் ஆவது கஷ்டம் என உள்ளூர் ஆட்கள் நினைக்கிறார்கள்.

மக்கள் செல்வாக்கு, வங்கியில் செல்வம் உள்ளவர்களுக்கு முன்னுரிமை என்பதால் உள்ளாட்சித்தேர்தலில்  அதிர்ச்சியில் இருக்கிறார்கள் அதிமுக தொண்டர்கள். 

இரண்டும் உள்ளவர்கள் மட்டுமே போட்டியிட அதிமுக தரப்பு வாய்ப்பு தரும் என்று கறாராக  கூறிவிட்டதால், அடிமட்ட தொண்டன் பிரசாரம், பிரியாணி என்று சாப்பிட்டுவிட்டும் பேசிவிட்டும் செல்ல வேண்டியதுதான். இதனால் மக்கள் செல்வாக்குள்ள தொண்டர்கள் அதிர்ச்சியில் இருக்கிறார்கள். அவர்களை சரிகட்டி ஓட்டு வாங்கி  கவுன்சிலர் ஆவது கஷ்டம் என உள்ளூர் ஆட்கள் நினைக்கிறார்கள்.  edappadi

அதனால் அவர்களை மாவட்ட அமைச்சர் அல்லது மாநில தலைமை தனியாக அழைத்து குஷிப்படுத்த முடிவு செய்து இருக்கிறது. இது ஒருபுறமிருக்க, பொங்கல் பரிசாக தமிழக அரசு சார்பில் ரூ 1000 அறிவித்துள்ள எடப்பாடி பழனிசாமி உள்ளாட்சித் தேர்தலை மனதில் வைத்து அதிமுக கட்சி சார்பாக தனியாக 1000 ரூபாயை வழங்க இருக்கிறது. இதுவும் உள்ளாட்சித் தேர்தலுக்கு அதிமுகவுக்கு சாதகமாக அமையும் என நம்புகிறது அதிமுக தலைமை.