கங்கனா மாதிரி ஒருபோதும் நடிக்க முடியாது!நடிகை மஞ்சுமா மோகன் தடாலடி!

 

கங்கனா மாதிரி ஒருபோதும் நடிக்க முடியாது!நடிகை மஞ்சுமா மோகன் தடாலடி!

தன்னால் கங்கனா ரணாவத் மாதிரி நடிக்க முடியவில்லை என்று நடிகை மஞ்சுமா மோகன் தெரிவித்துள்ளார். 

சென்னை: தன்னால் கங்கனா ரணாவத் மாதிரி நடிக்க முடியவில்லை என்று நடிகை மஞ்சுமா மோகன் தெரிவித்துள்ளார். 

manjima

அச்சம் என்பது மடமையடா படத்தின் மூலம் தனி ரசிகர்களை ஈர்த்தவர் மஞ்சுமா மோகன். சிம்புவுடன் அவர் நடித்த படம் பெரிய அளவுக்கு பேசப்பட்டாலும் மஞ்சுவுக்கு, அதிக வாய்ப்புக்களை ஏற்படுத்தித் தரவில்லை. இதனிடையே அவர் தனக்கு மூன்று வாய்ப்புக்கள் வந்ததாகவும் அதனை சிலர் தடுத்துவிட்டதாகவும் கூறி பரபரப்பை கிளப்பினார். 

manjima

இந்நிலையில்  பிரபல வார இதழ் ஒன்றுக்கு பேட்டியளித்த நடிகை மஞ்சுமா மோகனிடம் யாருடைய பயோபிக்கில் நடிக்க ஆசை என்ற கேள்வி முன்வைக்கப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், ‘பயோபிக் படத்துல நடிக்கிறது அவ்வளவு சுலபம் இல்ல. முதல்ல நம்ம யாரு படத்துல நடிக்குறோமோ அவங்கள நமக்கு பிடிக்கணும். அப்போ தான் அவங்கள பத்தி நம்மளால தெரிஞ்சிக்க முடியும். நடிகையர் திலகம் படத்துல கீர்த்தி சுரேஷ் அழுத சீன் பார்த்துட்டு நானும் அழுதேன். அவங்க அந்த படத்துல கஷ்டப்பட்டு நடிச்சிருந்தாங்க. நான் இப்போது, கங்கனா நடித்த குயின் படத்தின் ரீமேக்கில் நடித்து வருகிறேன். கங்கனா மாதிரி நடிக்கவே கஷ்டமா இருக்கும் போது நான் எப்படி பயோபிக் படத்துல நடிக்க முடியும்? அதுக்கெல்லாம் கொஞ்சம் டைம் ஆகும். ஆனால்  எனக்கு ஜெயலலிதாவை ரொம்ப பிடிக்கும். அவங்க கேரக்டரில் நடிக்க சொன்னா. உடனே ஓகே சொல்லிடுவேன்’ என்று மனம் திறந்துள்ளார். 

kangana

பாலிவுட் திரைப்படங்களில் சிறப்பாக நடித்துத் தனக்கென ரசிகர்கள் பட்டாளத்தைக் கொண்டிருப்பவர் கங்கனா ரணாவத். சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான ‘மணிகர்ணிகா: தி ஜான்சி ராணி’  திரைப்படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. அந்த வகையில் பாலிவுட் குயினாக உள்ள கங்கனா போன்று தன்னால் நடிக்க முடியாது இளம் நடிகை ஒருவர் ஓபனாக ஸ்டேட்மென்ட் கொடுத்திருப்பது கங்கனாவின் வளர்ச்சியையே  காட்டுகிறது என்கின்றனர் சினிமா விமர்சகர்கள். 

எது எப்படியோ கொஞ்ச நாளுக்கு பயோபிக் படம் பக்கம் மஞ்சுமா தலைகாட்ட மாட்டார் என்பது மட்டும் உறுதி…!

இதையும் வாசிக்க: காதல் மனைவியை கொலை செய்த ஜோசியர்: அதிர்ச்சி சம்பவம்!