ஓ.பி.எஸ் மகன் – அன்புமணியை விட நாங்க மட்டமா..? தம்பிக்காக பாஜகவிடம் முரண்டு பிடிக்கும் பிரேமலதா..!

 

ஓ.பி.எஸ் மகன் – அன்புமணியை விட நாங்க மட்டமா..? தம்பிக்காக  பாஜகவிடம் முரண்டு பிடிக்கும் பிரேமலதா..!

என் தம்பி அவர்களை விட அறிவாளி. அவருக்கு அமைச்சர் பதவி வேண்டும் விஜயகாந்த் மைத்துனர் எல்.கே.சுதீஷுக்கு அடித்தளம் போட்டு வருகிறார் பிரேமலதா.

தேமுதிக பிரச்சாரத்தில் சரியாகவே பங்கேற்கவில்லை.  ஆனால், மத்திய அமைச்சர் பதவி கேட்டு டெல்லியில் லாபி செய்து வருகிறது. சுதீஷ்

நாளை தேர்தல் முடிவுகள் வெளியாக உள்ள நிலையில் தமிழகத்தில் இருந்து பாஜக வைக்கும் விருந்துக்கு கிளம்பியவர்களில் பெரும்பாலான அரசியல் தலைவர்கள் இரண்டு விஷயத்துக்காக போய் இருக்கிறார்கள்.  ஒன்று மத்தியில் பாஜக ஆட்சிக்கு வந்தால் மத்திய அமைச்சர் பதவி கேட்டு ஒரு பைல் எடுத்துட்டு போய் இருக்கிறார்கள். அதன்படி ஓ.பி.எஸ் மகனை தொடர்ந்து அன்புமணியும் அமைச்சர் பதவி கேட்டு வருகிறார். அவர்களைத் தொடர்ந்து என் தம்பி அவர்களை விட அறிவாளி. அவருக்கு அமைச்சர் பதவி வேண்டும்  விஜயகாந்த் மைத்துனர் எல்.கே.சுதீஷுக்கு அடித்தளம் போட்டு வருகிறார் பிரேமலதா. ஓபிஆர்
 
இன்னொரு பைல் உள்ளாட்சி தொடர்பானது. இதுவும் பாஜக ஆட்சிக்கு வந்தால் இந்த கூட்டணி தொடர்வது பற்றியும் கிடைக்க வேண்டிய இடங்கள் பற்றியும், அதில் பாஜக பஞ்சாயத்து செய்து வாங்கித் தர வேண்டும் என்பது பற்றியும் இருக்கிறது.  தேர்தல் முடிவே வராத நிலையில் பாஜக விருந்து தேவைதானா..? என்கிற முணுமுணுப்புகள் ஒரு புறம் கேட்டாலும், துக்கடா கட்சிகள் இப்போதே மத்திய அமைச்சர் பதவி கேட்டு பாஜகவை நச்சரித்து வருவது தான் கொடுமையிலும் கொடுமை. அன்புமணி

அதிகமான தன்னம்பிக்கையும், கர்வமும் ஒருவரை மதி மயங்க செய்யும். பாஜக விஷயத்திலும் இதுதான் நடந்து வருகிறது. இந்த விருந்தில் பங்கேற்கும் அனைத்து கட்சி தலைவர்களுக்கும் விருந்து கொடுப்பதோடு பாஜக தலைவர் அமித் ஷா ஒரு முக்கியமான உறுதி மொழியும் கொடுக்க இருக்கிறாராம்.இதனால்தான் விருந்துக்கு தலைவர்கள் பல வண்ண கனவுடன் சென்று இருக்கிறார்கள் எனக் கூறுகிறார்கள்.