‘ஓ.பி.எஸ். குடும்ப ரகசியங்கள் ஒவ்வொன்றாக வெளியாகும்’ – தினகரன் மிரட்டல்

 

‘ஓ.பி.எஸ். குடும்ப ரகசியங்கள் ஒவ்வொன்றாக வெளியாகும்’ – தினகரன் மிரட்டல்

துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் குடும்பத்தினர் பற்றிய உண்மைகள் ஒவ்வொன்றாக இனி வெளியாகும் என டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

திருச்சி: துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் குடும்பத்தினர் பற்றிய உண்மைகள் ஒவ்வொன்றாக இனி வெளியாகும் என டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

அதிமுகவின் ஒருங்கிணைப்பாளரும், தமிழகத்தின் துணை முதல்வருமான ஓ.பன்னீர்செல்வத்தின் சகோதரர் ஓ.ராஜா, நேற்று முன்தினம் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டார். துணை முதல்வரின் சகோதரரே அக்கட்சியில் இருந்து நீக்கப்படும் அளவிற்கு அவர் மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் ரகசியமாக இருந்துள்ளது.

ops

ஒரு கட்டத்தில், ஓ.ராஜா இனியும் கட்சிக்குள் இருந்தால் அது கட்சியின் எதிர்காலத்துக்கு நல்லதல்ல என கருதிய முதல்வர் எடப்பாடி பழனிசாமியும், ஓ.பன்னீர்செல்வமும் இணைந்தே இந்த முடிவை எடுத்துள்ளனர். அதன் எதிரொலியாக, அதிமுக இல்லை என்றால் என்ன, இருக்கவே இருக்கு டிடிவி தினகரனின் அமமுக என்று தன் ஆதரவாளர்களிடம் ஓ.ராஜா ஆறுதல் கூறியதாக தகவல் வெளியாகி அடுத்த சர்ச்சைக்கு அடித்தளமிட்டுள்ளது.

இந்நிலையில், அமமுக பொது செயலாளர் டிடிவி தினகரன் திருச்சியில் இன்று செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, அ.தி.மு.க.வில் ஊழல் குற்றச்சாட்டுக்கு ஆளானவர்கள் தவிர மற்றவர்கள் அ.ம.மு.க.வுக்கு வரலாம் என்றும் ஓ. பன்னீர்செல்வம் குடும்பத்தினர் குறித்த உண்மைகள், இனி ஒவ்வொன்றாக வெளியாகும் என்றும் கூறி ஓ.பி.எஸ் ஆதரவாளர்களுக்கு அதிர்ச்சி வைத்தியம் கொடுத்துள்ளார். 

sasi

ஏற்கனவே, ஓ.பி.எஸ் மகன் ரவீந்திரநாத் மற்றும் அவரது சம்பந்தி குடும்பத்தினர் மீது தேனி மாவட்ட அதிமுகவிற்குள் அதிருப்தி நிலவி வருவதாக செய்திகள் வெளியாகி இருக்கிறது. இந்நிலையில், டிடிவி தினகரனின் இந்த பேச்சு, அதிமுகவினர் மட்டுமின்றி அரசியல் பார்வையாளர்கள் அனைவர் மத்தியிலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.