ஓ.பிஎஸ் மகன் மீது மோடிக்கு பொன்னார், தமிழிசை, ஹெச்.ராஜா மீது இல்லாத காதல்… புலம்பித் தள்ளும் ஈ.வி.கே.எஸ்..!

 

ஓ.பிஎஸ் மகன் மீது மோடிக்கு பொன்னார், தமிழிசை, ஹெச்.ராஜா மீது இல்லாத காதல்… புலம்பித் தள்ளும் ஈ.வி.கே.எஸ்..!

மோடிக்கு பொன்னார், தமிழிசை, ஹெச்.ராஜா மீது இல்லாத காதல் ஓ.பி.எஸ் மகன் ரவீந்திர நாத் மீது உள்ளதாக காங்கிரஸ் கட்சி நிர்வாகி ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் தெரிவித்துள்ளார்.

மோடிக்கு பொன்னார், தமிழிசை, ஹெச்.ராஜா மீது இல்லாத காதல் ஓ.பி.எஸ் மகன் ரவீந்திர நாத் மீது உள்ளதாக காங்கிரஸ் கட்சி நிர்வாகி ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் தெரிவித்துள்ளார்.ஓ.பி.ஆர்

தேனியில் தோல்வியடைந்ததை அடுத்து சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், ’’தேனி தொகுதியில் தேர்தலில் முறைகேடு நடந்ததற்கான ஆதாரங்கள் என்னிடம் இருக்கிறது. பணபலத்தால்  எனது தோல்வி உருவாக்கப்பட்டுள்ளது. தனது மகன் ரவீந்திர நாத் வெல்ல வேண்டும் என்பதற்காக வாரணாசி சென்று ஓ.பி.எஸ் மோடியை சந்தித்தார். தமிழிசை

தேனி தொகுதியில் தில்லுமுல்லு நடந்துள்ளது. பல மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில்  சீல் இல்லை. பணம் சுனாமியாக கொட்டியது. ரவீந்திர நாத் வெற்றியை எதிர்த்து வழக்குத் தொடர்வேன். ஒப்புகை சீட்டு இயந்திரங்களை மீண்டும் எண்ண வேண்டும். ஓபிஎஸ் மீது மோடிக்கு ஏன் இவ்வளவு அக்கறை என தெரியவில்லை. சி.பி.ராதாகிருஷ்ணன், தமிழிசை, பொன்.ராதாகிருஷ்ணன் ஹெச்.ராஜா மீது இல்லாதா காதல் மோடிக்கு ஓ.பி.எஸ் மகன் ரவீந்திர நாத் மீது உள்ளது. 

காங்கிரஸ் இந்திய அளவில் வெற்றி பெறாததற்கு காரணம் தமிழகத்தில் அமைந்த கூட்டணி போல பிற மாநிலங்களில் ஏற்படவில்லை. ராகுல் காந்தியை ஸ்டாலின் பிரதமராக அறிவித்தார். மற்ற மாநிலங்களில் யாரும் அறிவிக்கவில்லை. எதிர் கட்சிகள் ராகுல் காந்தியின் தலைமையின் கீழ் இயங்கவில்லை.  இதுதான் காங்கிரஸின் தோல்விக்கு முக்கிய காரணம். OPR

தமிழகம், கேரளாவை போல வடமாநில மக்கள் புத்தி சாலியாக இல்லை.  மோடியின் பிரச்சாரத்தால் அவர்கள் மயங்கிப்பொய் விட்டனர். அவர்கள் விரைவில் தெளிவு பெறுவார்கள். தமிழகத்துக்கு காங்கிரஸ், திமுக எம்பிக்கள் குரல் கொடுப்பார்கள்’’ என அவர் தெரிவித்தார்.